Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.2024

Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.2024


PDF LINK 

Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.2024



திருக்குறள் :

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.

பொருள்

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

பழமொழி :
Justice for the self is not the same to others.

ஊருக்கு ஒரு நியாயம். தனக்கு ஒரு நியாயம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன்.

2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.

பொன்மொழி :

என்னைப் பற்றி போற்றி பாடுபவர்களை விட, என்னை கடுமையாக விமர்சிப்பவர்களால் தான் நான் அதிகம் நன்மை பெற்றுள்ளேன். - காந்தியடிகள்

பொது அறிவு :

1. கோள்களின் இயக்கத்தை கண்டு பிடித்தவர் யார்?

கோப்ளர்.

2. கணிப்பொறி மொழியைக் கண்டு பிடித்தவர் யார்?

கிரேஸ் கோப்பர்

English words & meanings :

I am stuffed - my stomach is full, என் வயிறு நிறைந்து உள்ளது,

fit as a fiddle - very healthy, நல்ல ஆரோக்கியமாக
ஆரோக்ய வாழ்வு :

இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் உண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இது இரத்தத்தில் உள்ள நச்சு தன்மை சுத்தப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கணினி யுகம் :

Alt + 0191 - ¿

Alt + 0176 - °  (degree symbol)
நவம்பர் 20

[11/20, 4:37 AM] +91 90808 66039: சர்வதேச குழந்தைகள் தினம்
👶 சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும், குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கவும் யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.
[11/20, 4:37 AM] +91 90808 66039: ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினம்
✍ ஆப்பிரிக்கா, இயற்கை வளம் நிறைந்த நாடு. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த நாடு. ஆனால் தொழில் வளர்ச்சி ஏற்படாததால் பஞ்சம், பசி, பட்டினி போன்றவை நிரந்தரமானதாக உள்ளது. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், வன்முறை, உணவுப் பஞ்சம் போன்ற மிகப்பெரிய சவால்கள் உள்ளன. ஆகவே ஆப்பிரிக்காவின் மீது ஐ.நா. தனிக்கவனம் செலுத்தி நவம்பர் 20ஆம் தேதியை ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினமாக அறிவித்தது.
திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள்...

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.[1]மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.

நீதிக்கதை

யார் ஏழை?

ஒரு பணக்கார அப்பா, அவர் குழந்தைகளை கிராமத்தை சுற்றி காட்ட அழைத்துச் சென்றார். இரண்டு நாள் ஒரு குடிசையில் ஏழை விவசாயிகள் கூட இருந்தாங்க. திரும்ப வரும் போது, அப்பா கேட்டார்,

ஏழை எப்படி இருக்காங்கன்னு பார்த்தியா?… இப்ப என்ன சொல்றே? மகன் சொன்னான் ஆமா..அப்பா..என் கிட்ட ஒரு நாய் குட்டி தான் இருக்கு. ஆனால் அவங்க கிட்ட நாலு இருக்கு.

நம்ம வீட்ல ஸ்விம்மிங் பூல், கார்டன்ல நடுவிலே இருக்கு. ஆனால் அவங்க வீட்டு பக்கத்துல அழகான ஆறு ஓடுது. நாம கலர் கலரா லைட் போட்டு, படங்கள் மாட்டி நம்ம வீட்டு அழகு படுத்தறோம். ஆனா அவங்க வீட்டுல் ரெயின்போ அழகு படுத்துது... நம்ம சுவரோட நம்ம வீட்டு எல்லை முடிஞ்சுடுது. ஆனால் அவங்களுக்கு கண்ணுக்கு எட்டுன் தூரம் வரை அவங்க எல்லை.

நாம காசு குடுத்து அரிசி வாங்குறோம். ஆனா இவங்க நம்ம கிட்ட அதை விக்கறாங்க. நம்மை பாதுக்காக்குறதுக்கு நம்மை சுற்றி சுவர் மட்டும் தான் இருக்கு... ஆனால் இவங்க பாதுகாப்புக்கு நண்பர்கள் இருக்காங்க.. அப்பா!..நாம எவ்வளவு ஏழைனு புரிய வைத்ததற்கு நன்றி அப்பானு சொன்னான். அவங்க அப்பா வாயடைச்சே போயிட்டார். அவருக்கும் இப்ப நிறைய விஷயங்கள் புரிஞ்சது.

இன்றைய செய்திகள்

20.11.2024

* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்,, திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் வாயிலாக 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

* அதி தீவிர தொடர் கனமழை, கடல் சீற்றத்துக்கு வாய்ப்பு: நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

* வரும் கோடைக்காலத்தில் சீரான மின்விநியோகம் செய்வதற்காக, சென்னை மண்டலத்தில் 9 இடங்களில் ரூ.176 கோடி செலவில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

* டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை: ஆன்லைனில் பாடம் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு.

* இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.

* சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்திய ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்.

* நேஷன்ஸ் லீக் கால்பந்து: குரோஷியா - போர்ச்சுகல் ஆட்டம் 'டிரா'.

Today's Headlines

* The Chief Electoral Officer has said that 6 lakh 85 thousand people have applied through special camps held for adding, deleting and correcting names in the voter list.

* Extremely intense continuous heavy rains, possibility of sea storm: Nagai fishermen banned from going to sea.

* Power Minister Senthil Balaji has said that substations will be set up at 9 places in the Chennai region at a cost of Rs. 176 crore to ensure smooth power supply in the coming summer.

* In-person classes banned up to class 12 as air pollution increases in Delhi: Supreme Court orders online classes.

* SpaceX rocket successfully launches ISRO's GSAT-N2 satellite.

* China Masters badminton tournament: Indian pair advances to the pre-quarterfinals.

* Nations League football: Croatia - Portugal match 'draw'.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal Study TNTET 2026 - Tamil மாதிரித் தேர்வு 32

TNTET 2026 - Tamil Model Test 32 | Zeal Study TNTET 2026 - Tamil மாதிரித் தேர்வு 32 Zeal Study 1. கீழ்கண்டவர்களுள் சங்ககாலப் பெண்பாற் புலவர் A. வெண்ணிக்குயத்தியார் B. வெள்ளி வீதியார் C. ஒளவையார் D. அனைவரும் 2. பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்குப் பாமாலை சூட்டியவர் A. ஔவையார் B. பண்டித ராமாபாய் C. காரைக்கால் அம்மையார் D. எவருமில்லை 3. சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி A. பண்டித ராமாபாய் B. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி C. மூவலூர் இராமாமிர்தம் D. அன்னிபெசன்ட் 4. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் ...

Followers