Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.04.2024

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.04.2024




திருக்குறள்:

"பால்: பொருட்பால். இயல்: அரசியல்.
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

விளக்கம்:

நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

பழமொழி :
Small rudders guide great ships

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்.


பொன்மொழி :

பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.

பொது அறிவு :

1. பண்டைய சோழர்களின் சின்னம் எது?


விடை: புலி

2 ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்?

விடை: எதுகை
English words & meanings :

Debut(n) - first public appearance as a  performer அரங்கேற்றம்
Decency(n) - respectable behaviour
நல்லொழுக்கமுள்ள நடத்தை
ஆரோக்ய வாழ்வு :

பருப்புகீரை:
பருப்புக் கீரையை நன்கு அரைத்து அக்கி வந்த இடங்களில் மேல்பூச்சாகத் தடவி வந்தால், கொப்புலங்கள்மறைந்து உடல் குளுமையடையும்.

நீதிக்கதை

.நரியும் ஆடும்

வயதான நரி ஒன்று ஒரு நாள் இரை தேடி வெகு நேரம் காட்டில் அலைந்தது. இரை எதுவும் கிடைக்காததால் பசியால் மிகச் சோர்வுற்று களைப்புடன் தள்ளாடி நடந்து சென்றது, வழியில் பெரிய பாழுங்கிணறு ஒன்று இருந்தது. அதற்குக் கைபிடிச் சுவர் இல்லாததால் தள்ளாடி நடந்து சென்ற நரி தவறி கிணற்றினுள் விழுந்து விட்டது.

கிணறு வெகு ஆழமாக இருந்ததால் பலவாறு முயன்றும் நரியால் தப்பி வெளியே வர முடியவில்லை. அதனால் அயர்வுற்றது.அதற்கு ஆடு ஆசையுடன் "நானும் அங்கு வரலாமா? நாம் இருவரும் சேர்ந்து புல் தின்னலாமா?" என்று கேட்டது. நரி, "இங்கு நிறையப் புல் இருப்பதால் நாம் இருவரும் புசிக்கலாம் தாங்கள் இங்கே இறங்கி வாருங்கள்" என்றது.

ஆடு சிறிதும் யோசிக்காமல் கிணற்றினுள் குதித்தது. சமயம் எதிர்பார்த்திருந்த நரி ஆட்டின் தலையின் மேல் காலை வைத்துத் தாவி வெளியே குதித்துத் தப்பி ஓடியது.

ஆடு, நரியின் செயலைக் கண்டு திகைத்து அச்சமுற்றது. பல முறை முயன்றும் அதனால் வெளியே வர முடியவில்லை. தனது அறியாமையை நினைத்து வருந்தியது.

பொழுது கடந்து வெகுநேரம் ஆகியும் ஆட்டைக் காணாத குடியானவன் அதைத் தேடி அலைந்தான். தற்செயலாய் அக் கிணற்றினருகில் வந்து எட்டிப் பார்த்தான். தனது ஆட்டைக் கண்டான். உடனே கிணற்றில் இறங்கி ஆட்டை வெளியேற்றினான். தப்பிய ஆடு குடியானவனுடன் வீடு திரும்பியது.

யார் எதை சொன்னாலும் யோசித்து செயல்பட வேண்டும்.

இன்றைய செய்திகள்

02.04.2024

*சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி மூலம் ரூபாய் 1800 கோடி கிடைத்தது.

*தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்வு; முதல்வர் மு க ஸ்டாலின்.

*கோடை வெயில் கொளுத்துவதால் சென்னையில் கண் நோய் பாதிப்பு அதிகரிப்பு.

*தமிழகம் முழுவதும் 83 மையங்களில் +2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.

*டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட் புதிய சாதனை படைத்த எம்எஸ் தோனி; விராட் கோலி சாதனையை முறியடித்த தோனி.

Today's Headlines

*Chennai Corporation got Rs 1800 crore through property tax.

*Tamil Nadu's electronics exports rise to $7.4 billion;  CM Stalin.

* Increase of 'eye disease' in Chennai due to scorching heat.

*Correction of +2 answer sheet started today in 83 centers across Tamil Nadu.

*MS Dhoni  made a new record by taken 300 wickets in T20 cricket;
Dhoni broke Virat Kohli's record.
Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2026

Followers