Skip to main content

கொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா? - ஒரு பார்வை

தடுப்பூசி மூலம் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதே கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த முக்கிய கேடயமாக உள்ள நிலையில், திங்கட்கிழமை முதல் நாட்டின் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு தொடங்குகிறது.
மத்திய அரசே நாட்டில் உற்பத்தியாகும் 75% தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு அளிக்கும் கொள்கை மாற்றம் அமலுக்கு வருவதால் நாட்டின் தடுப்பூசி திட்டம் கூடுதல் வேகம் பெறுமா என்கிற முக்கிய கேள்விக்கான விடையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நாட்டின் பல பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு நீண்ட வரிசைகள் மற்றும் அதேநேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் வதந்திகள் காரணமாக தடுப்பூசியை தவிர்க்கும் எண்ணம் என பல்வேறு வகையான யதார்த்தங்களுக்கிடையே, கொரோனா மூன்றாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சம் வலுப்பெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், தடுப்பூசி திட்டத்தில் அடுத்த கட்டம் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கும்; அடுத்த சில மாதங்களில் தடுப்பூசிகளின் தட்டுப்பாடு தீருமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மே மாதத்திலேயே இந்திய மக்களுக்கு கிடைத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8 கோடி மட்டுமே. கொரோனா வைரஸ் பெருந்தோற்று இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த சூழலில், மக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கினார்கள். போதிய அளவில் தடுப்பூசிகள் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வியை மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் சார்பாக தொடர்ந்து எழுப்பிவந்தன. கடும் எதிர்ப்பின் அழுத்தத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதால், மாநில அரசுகள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் கொள்கையை கைவிட்டு, மத்திய அரசு தடுப்பூசிகளின் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்தது. இதனால் ஜூன் மாதம் இந்திய மக்களுக்கு கிடைக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12 கோடியாக உயர்ந்துள்ளது.
மே மாதத்தை விட 50% தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் அதிகரிக்கப்பட்டாலும், இப்போதைய சூழ்நிலையில் இது போதுமானதாக இல்லை. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலே மூன்றாம் அலை இந்தியாவை தாக்கலாம் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி திட்டத்தில் வேகம் மேலும் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும். நாடு முழுவதுமே ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 35 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தினசரி சராசரியை மூன்று மடங்கு அதிகரித்து ஒவ்வொரு நாளும் ஒரு கோடி நபர்களுக்கு தடுப்பூசி அளித்தால் மட்டுமே மூன்றாவது அலையின் பாதிப்பை கட்டுப்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகும்.
இதுவரை நாட்டின் ஒட்டுமொத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 சதவீதம் நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசியின் 2 டோஸ்களும் அளிக்கப்பட்டுள்ளது. 18 வயதுககு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 13 சதவீதத்தினருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை மாதத்தில் 20 கோடி நபர்களுக்கு தடுப்பூசி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 25 கோடியாகவும், பின்னர் செப்டம்பர் மாதத்தில் 30 கோடியாகவும் அதிகரிக்கும் என அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்த தடுப்பூசிகள் பெரும்பாலும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவாக்சின் எனவும் பிற தடுப்பூசிகள் அதிகம் கிடைக்க அடுத்த இரண்டு மாதங்களிலேயே வாய்ப்பு குறைவு எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உதாரணத்திற்கு, அடுத்த மாதத்தில் 10 கோடி கோவிஷில்டு தடுப்பூசிகள் மற்றும் ஏழரை கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தவிர தனியார் மூலம் இறக்குமதி செய்யப்படும் இரண்டரை கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளும் ஜூலை மாதத்தில் கிடைக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க அரசு தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு அளித்து உதவி செய்ய முடிவு செய்திருப்பதால், அதிலிருந்து சில கோடி தடுப்பூசிகள் இந்தியாவுக்கும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இதற்கான விவரங்களை அமெரிக்க அரசு இறுதி செய்யவில்லை.
மத்திய அரசு சமீபத்தில் பயாலஜிக்கல்-ஈ நிறுவனத்திடம் முப்பது கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதைத் தவிர சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் ஏற்கெனவே தயாரித்து வரும் கோவிஷீல்டு தவிர இன்னொரு தடுப்பூசியும் இந்தியாவில் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இப்படி தடுப்பூசிகளின் கொள்முதல் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் எத்தனை சதவீதத்தினருக்கு மூன்றாம் அலைக்கு முன்பாக தடுப்பூசி கிடைக்கும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
தடுப்பூசிகளின் கொள்முதல் அதிகரிக்கும் நிலையில், அத்துடன் விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அதிகரிப்பதும் மற்றொரு முக்கிய சவாலாக உள்ளது. இதுவரை மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளின் கிட்டத்தட்ட 6% வீணாகி உள்ளது மிகவும் வருந்தத்தக்க தகவலாகும். மத்திய அரசின் திட்டப்படி இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்தியாவில் 216 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும். அதாவது, எட்டு கோடி நபர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி அளிக்க முடியும். ஆனால், இதில் தாமதங்கள் இல்லாமல் எப்படி தவிர்க்கப்படும் என்பதும் தடுப்பூசிகள் வீணாகாமல் பொதுமக்களை சென்றடையுமா என்பதும் முக்கிய கேள்விகள்.
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு இன்னமும் எந்த தடுப்பூசியும் ஒப்புதல் பெறவில்லை என்பதும் மற்றொரு முக்கிய சவாலாக உள்ளது. சிறுவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க வழி இல்லை என்பதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க ஏற்ற சூழல் இல்லை. இத்தகைய சவால்களுக்கு இடையேதான் தடுப்பூசி கொள்கையில் புதிய மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. அத்துடன் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கிறது. அதேசமயத்தில் நாட்டில் உற்பத்தியாகும் 25% சதவிகிதம் தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து பொதுமக்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் பயன்பாட்டுக்கு விநியோகிப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுமையை ஓரளவுக்கு குறைக்கும்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2026

Followers