Psychology paper 1 and 2 முக்கியமான 60 கேள்வி பதில்கள்.. தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்..
1. பலவீனங்களை மீறி சாதனை புரிந்தவர்களின் உண்மை கதையை கூறி தன்னம்பிக்கை உணர்வினை ஏற்படுத்துவதற்கான உதாரணம் - காது கேட்காத ஒருவன் சிறந்த இசை அமைப்பாளராக மாறியது
2. அவநம்பிக்கை வெறுப்பு தோல்வி உணர்ச்சி சந்தேகம் பாதுகாப்பற்ற உணர்வு போன்ற எதிர்மறையான எண்ணங்களின் அடிப்படையில் அமையும் தற்கருத்து - எதிர்மறை தற்கருத்து
3. நல்லவிதமான சுய அறிவுறுத்தல்களை மாணவர்கள் கடைபிடிக்க உதவுவதற்கான எடுத்துக்காட்டு - நான் கணிதத்தில் தேர்ந்தவன் என்னால் இதைச் செய்ய இயலும்
4. சமூகவியல்பின் விளைவு - நாம் என்னும் உணர்வை பெறுவது
5. கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள். எண்ணங்களுக்கு செயல்வடிவம் தாருங்கள் என கூறியவர் - அப்துல் கலாம்
6. குழந்தை பருவ சகோதர சகோதரி உறவில் செல்வாக்கு இல்லாத சமூக காரணி - பொறாமை குணம்
7. ஒருவன் தன்னுடைய நிறை குறைகளை முழுமை தழுவி அணுகு முறையில் உண்மையான நோக்கில் மதிப்பீடு செய்து கொள்வது - தன்னை அறிதல்
8. மாணவரோ ஆசிரியரோ அல்லது சமுதாயமோ சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என அறிய செய்வதற்கு விளையாட்டு முறையில் பயன்படுத்தப்படுவது - பாவனையின் நடிப்பு
9. ----- மேற்பட்ட குழந்தைகளிடம் கூட்டு விளையாட்டுக்கள் முக்கியத்துவம் பெறுகின்றது - 12 வயதுக்கு
10. குறையாளுமை பெற்றவரின் பண்புகளில் மூன்று - தனிமை ஏமாற்றம் சந்தேகம்
11. நிறைய ஆளுமை பெற்றவரின் பண்புகளில் இரண்டு - கடின உழைப்பு நல்லிணக்கம்
12. ஒரு குழந்தையின் தற்காலத்து வளர்ச்சியை குழந்தையின் ---- உருவாக்குகிறது - குடும்பம்
13. தன்னை அறிய தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுக்கின்றான். என்றவர் - திருமூலர்
14. வளர்ச்சி நிலைகளில் ஏற்படும் சிக்கல்கள் - வளர்ச்சி சார் சிக்கல்கள்
15. தன்னிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ
16. கீழ்க்கண்டவற்றுள் எந்த கருத்தை தர்ஸ்டன் ஆதரித்தார் - குழு காரணி கொள்கை
17. தார்ண்டைக் கற்றல் பற்றிய கருத்து - முயன்று தவறி கற்றல்
18. முதல் நிலை ஊக்கிகளாக கருதப்படுபவை - உயிர் வாழ்வதற்குரிய உடலியல் தேவைகள்
19. கவனத்தின் அக காரணி - மனோநிலை
20. காக்னே கற்றலில் எத்தனை படிநிலைகளை விளக்கினார் - 8
21. கீழ்க்கண்டவர்களில் மனித உளவியல் அறிஞர் - கார்ல் ரோஜர்ஸ்
22. தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்
23. புறமுகன் எனப்படுபவர் எந்த சிந்தனை உடையவர் - விரி சிந்தனை
24. ஆளுமை என்னும் சொல்லில் personality என்பது - நடிகரால் அணியப்பட்ட முகமூடி
25. பயிற்சி மாற்றத்தில் இணையான மூலங்கள் எனும் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் - தாரண்டைக்
26. எளிதில் கோபப்படும் குணமுடையவர்களின் இயல்பான மனநிலை - உணர்ச்சி வசப்படுபவர்
27. புலன் பயிற்சி கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி
28. குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் வைத்துக் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கையை விளக்குவது - கவன வீச்சு
29. கவனித்தலை அதிகப்படுத்த தேவையானது - ஊக்கம்
30. கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே
31. கவன வீச்சு அரிய உதவும் கருவி - டாப்சிஸ்டாஸ்கோப்
32. குமரப் பருவம் குழப்பங்களையும் நெருக்கடிகளையும் உள்ளடக்கியது என்று சொன்னவர் - ஸ்டான்லி ஹால்
33. எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளை கொண்டுள்ளது - எட்டு
34. குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் எந்த வயதில் ஏற்படுகிறது - 2-3 ஆண்டுகள்
35. வலுவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்
36. குமரப் பருவத்தின் மிகப்பெரிய பிரச்சனை - கீழ்படியாமை
37. இலான் பாவ்லவ் ஆய்வு செய்தது - அறிவுத்திறன்
38. விளைவு விதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது - வெகுமதி
39. சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக்
40. பியாஜே அறிவு வளர்ச்சி பற்றிய மொத்த நிலைகள் - 4
41. பிரட்ரிக் ஜே மேக் டொனால்ட் நிறுவிய பள்ளி - நடமாடும் பள்ளிகள்
42. தூண்டுதல் இல்லாமல் புலன்களால் உணர்வது என்பது அறியப்படுவது - உணரும் ஆற்றல்
43. கீழ்க்கண்டவர்களுள் யார் முன் பருவ கல்வியுடன் தொடர்பில்லாதவர் - பெஸ்டலோசி
44. ப்ரோபெலுடன் தொடர்பில்லாதது - கற்பிக்கும் உபகரணங்கள்
45. சாதனை ஊக்கக்கொள்கையை விரிவாக்கியவர் - மெக்லீலேண்டு
46. ஜீன் பியாஜெவின் சென்சரி மோட்டார் நிலைக்காலம் விரவிஇருப்பது - 0 முதல் 2 ஆண்டுகள் வரை
47. எந்த ஒரு மனிதனின் பயன்பாட்டையும் பெரிதும் நிர்ணயிப்பது - சுற்றுப்புற சூழல்
48. ஆளுமையை குறிக்கும் பர்சனாலிட்டி என்ற சொல் எந்த மொழியில் இருந்து வந்தது - லத்தீன்
49. தலையிடாமை ஆசிரியர் நடைமுறையில் கொண்டு வருவது - கட்டுப்பாடு இல்லாமை
50. மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப்படுத்துதல்
51. வெற்றியைப் போல் பின் தொடர்வது வேறொன்றுமில்லை என்ற கருத்துரையை விளக்கும் சட்டம் - தயார் நிலையில் இருத்தல்
52. சாந்தி நிகேதன் ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 1901
53. முதன்முதலாக நடுநிலை கல்வியில் பலவிதமான மார்க்கங்களை குறிப்பிட்டது - ஹண்டர் குழு
54. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு - 1260 கிராம் முதல் 1400 கிராம் வரை
55. பிறக்கும்போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் - 350 கிராம்
56. பழைய அனுபவங்களை சிந்தித்து அவற்றுடன் புதிய அனுபவத்தை பொருத்தி பார்த்து ஒரு முடிவுக்கு வருவது - குவி சிந்தனை
57. பழைய அனுபவத்துடன் புதிய அனுபவத்தை பொருத்தி பார்த்து மேலும் ஒரு புதிய அனுபவத்தை பெற முயற்சிப்பது - வெறி சிந்தனை
58. சிந்தனையின் குழுச் செயலாக கருதப்படுவது - ஆய்ந்தறிதல்
59. கற்றலுக்கு ஏற்ற பருவம் - பிள்ளைப் பருவம்
60. ஆய்வின் முதல் படி - பிரச்சனையை உணர்தல்
Comments
Post a Comment