Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.04.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.04.2026





    




 








திருக்குறள்: 


குறள் 774: 


கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் 

மெய்வேல் பறியா நகும். 


விளக்க உரை: 


கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.


பழமொழி :

Knowledge is a lifelong treasure. 


அறிவு வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் செல்வம்


இரண்டொழுக்க பண்புகள் :.


1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.


2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்


பொன்மொழி : 


எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆனதில்லை. வரலாறு ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை -காமராஜர்


பொது அறிவு : 


01.செடிகளின் வளர்ச்சியை அறிவதற்கு பயன்படும் கருவி எது?



கிரிஸ்கோகிராஃப்-Crescograph.


02. 'என் உண்மை' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியவர் யார் ?


முன்னாள் பிரதமர். திருமதி.இந்திரா காந்தி

Former Prime Minister Mrs.Indira Gandhi

English words :


commotion -


confused movement, பெருங் கூச்சல், அதி உற்சாகமான அல்லது குழப்பமான இயக்கம்


concoction - 


any foodstuff or medicines made by combining different ingredients, வேறுபட்ட 


உணவு பொருட்கள் அல்லது மருந்து பொருட்களின் கலவை


தமிழ் இலக்கணம்: 


தோலின் தன்மை கொண்டு அவை அழைக்கப் படும் பெயர்கள்


1. மெல்லிய பழத் தோல் - தொலி 


2. திண்ணமான பழத்தோல் - தோல்


3. வன்மையான பழத்தோல் - ஓடு


4. காய்ந்த முழு சுரையின் தோல் - குடுவை


5. நெல், கம்பின் தோல் - உமி


அறிவியல் களஞ்சியம் :


ஹீலியத்தை அதன் கொதிநிலையை விட சில டிகிரி குறைவாக, அதாவது 452 டிகிரி ஃபாரன்ஹீட் (–269 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலைக்குக் குளிர்வித்தால், அது மீப்பாய்மமாக (superfluid) மாறுகிறது. அதாவது, அதனால் உராய்வின்றி நகர முடியும். அது ஒரு கண்ணாடிக் குவளையின் ஓரங்களுக்கு மேல் உயர்ந்து செல்ல முடியும். இது மட்டுமல்ல, ஒரு கொள்கலனில் உள்ள மூலக்கூறு-மெல்லிய விரிசல்கள் வழியாகவும் அது வெளியேற முடியும். அறிவியலில் உள்ள மற்ற வியக்கத்தக்க உண்மைகளில் , பிரபஞ்சத்தில் இரண்டாவது அதிக அளவில் காணப்படும் தனிமம் ஹீலியம் ஆகும். 


ஏப்ரல் 08


பங்கிம் சந்திர சட்டர்ஜி  அவர்களின் நினைவுநாள்



பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838– ஏப்ரல் 8, 1894) ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

நீதிக்கதை


 பலசாலி முயல்


அடர்ந்த காட்டு வழியே நடந்து கொண்டிருந்த முயல், மூங்கில்குருத்துகளை உடைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த யானையைப் பார்த்தது.


"வணக்கம் யானையண்ணே. இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு" என்றது.


தன் காலடியில் நின்ற முயல்குட்டியை அலட்சியமாகப் பார்த்தது யானை. "என் கால் நகம் அளவுகூட இல்லாத நீ எல்லாம் என்கிட்டே பேசுற அளவு வளர்ந்துட்டியா?" என்று கடுமையாகக் கேட்டது.


முயல் குட்டியின் முகம் வாடிப்போனது.


ஏன் யானை அண்ணன் தன்னிடம் இப்படி பேசியது என்று யோசித்தபடியே நடந்தது. காட்டையொட்டி இருக்கிற எரி வாழும் முதலை அக்காவிடம் கேட்கலாமே என்று எரிக்கு ஓடியது.


"முதலை அக்கா…"


முயலின் சத்தம் கேட்டு, தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்த்தது முதலை. கடற்கரையில் இருந்த முயலைப் பார்த்து, "நீயா? என்னைக் கூப்பிட்டாயா?" என்றது.


ஆமாம் எனத் தலையாட்டியது முயல். அது அடுத்த வார்த்தை பேசுவதற்குள், "என் கண்ணைவிட சின்னதா இருக்கற உன்கிட்டே பேசறதுக்கு எனக்கு நேரம் இல்லை" என்று யானையை விடக் கடுமையாகப் பேசிவிட்டுத் தண்ணீருக்குள் சென்றது முதலை.


முயலின் சோகம் அதிகமானது. மீண்டும் முதலையை அழைத்தது. "நான் உருவத்துல சின்னதா இருந்தாலும் பலத்துல உங்களைவிட பெரியவன். வேணும்னா ரெண்டு பேரும் நேருக்கு நேர் மோதிப் பார்க்கலாமா?" என்று கேட்டது.


முதலைக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. இருந்தாலும் போட்டிக்கு ஒப்புக்கொண்டது.


நீளமான கயிறைக் கொண்டுவந்து முதலையிடம் கொடுத்தது. "அக்கா, இந்தக் கயிற்றின் இன்னொரு முனையை நான் பிடித்துக்கொள்வேன்.


நான் இழு என்று சொன்னதும் நீங்கள் இழுக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு, கயிறுடன் காட்டுக்குள் ஓடியது.


அங்கே இருந்த யானையையும் இதேபோல போட்டிக்கு அழைத்தது. "இதென்ன பெரிய விஷயம்? நான் ஒரு இழு இழுத்தால் நீ காணாமல் போய்விடுவாய்" என்று சொல்லிக்கொண்டே கயிறைத் தன் தும்பிக்கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது யானை.


" நீங்கள் கொஞ்சம் பொறுங்கள் அண்ணா. நான் அந்தப் பக்கம் சென்று, கயிற்றின் இன்னொரு முனையைப் பிடித்துக்கொள்கிறேன். இழு என்று சொன்னதும் போட்டி தொடங்கும்" என்று சொல்லிவிட்டு, யானையின் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு புதரில் மறைந்துகொண்டது.


முதலைக்கும் யானைக்கும் கேட்பதுபோல் சத்தமாக, "இழுக்கலாம்" என்று கத்தியது. உடனே அடுத்த முனையில் முயல் குட்டி இருப்பதாக நினைத்து இரண்டு விலங்குகளும் கயிறை வேகமாக இழுத்தன.


இரண்டுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. முயலுக்கா இத்தனை வலிமை இருக்கிறது என்று நம்ப முடியாமல் கயிறை வேகமாக இழுத்தன.


கொஞ்சம் விட்டால் முதலை தண்ணீரைவிட்டு வெளியே வந்துவிடும் போல இருந்தது. யானைக்கும் அப்படித்தான். தும்பிக்கையே உடைந்துவிடும் போல வலித்தது. இருந்தாலும் இரண்டும் தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி இழுத்தன.


பட்டென இரண்டாக அறுந்தது கயிறு. அந்த வேகத்தில் அருகில் இருந்த மரத்தில் மோதி மண்டை வீங்கியது யானைக்கு. முதலை பாறையில் மோதி சிராய்த்துக்கொண்டது.


முயலின் திட்டம் புரியாமல், உருவத்தை வைத்து திறமையை எடைபோட்டுவிட்டோமே என்று நொந்தபடி யானையும் முதலையும் அதனதன் வேலையைப் பார்க்கக் கிளம்பின.


அன்று முதல் முயல் குட்டியை எங்கே பார்த்தாலும் புன்னகைத்தபடியே வணக்கம் சொன்னது யானை. முதலையும் முயல் குட்டியிடம் மரியாதையாகப் பழகியது.


இன்றைய செய்திகள்


08.04.2026


⭐நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு 26 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


⭐ இந்தியாவில் 19 வயதுக்குட்பட்ட சுமார் 4 கோடி குழந்தைகள் உடற்பருமனுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த பாதிப்பு ஆண்டுக்கு 5% அதிகரித்து வருகிறது.


⭐நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை எழுதவோ அல்லது வழக்குகளில் முடிவெடுக்கவோ AI-யைபயன்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் & குஜராத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ  7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


Today's Headlines


⭐ 26 lakh people have applied for the NEET examination across the country.


⭐ In India, about 4 crore children under the age of 19 are living with obesity. In India, this incidence is increasing by 5% every year.


⭐The Kerala High Court and the Gujarat Court have banned AI-initiators from writing their judgments or deciding on cases. 


🏀 sports news


🏀The Māntekarlo Masters Tennis competition is going on in Monaco. Men's Singles Division 2nd Round: India's Stefanos Tsitsipas won the 7-5, 6-4 set and advanced to the next round


Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TNTET 2026: Tamil Quiz - Model Test 16 தமிழ் மாதிரித் தேர்வு - 16 (பழமொழி, திருநெல்வேலி & இலக்கணம்)

 இதில் பழமொழி நானூறு, திருநெல்வேலி வரலாறு, சிற்றிலக்கியங்கள் மற்றும் இலக்கணப் பகுதியான அணிகள் தொடர்பான அனைத்து வினாக்களும் இடம்பெற்றுள்ளன.தேர்வு முடித்த பின் விடைகளை மேலே scroll பண்ணி பார்க்கவும்.நன்றி 

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Followers