Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.04.2026
திருக்குறள்:
குறள் 917:
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்
உரை:
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.
பழமொழி :
Bend the twig,bend the tree.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.
2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.
பொன்மொழி :
மேலான பண்புள்ளவர்களின் சொற்களை கேளுங்கள் அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுங்கள் - ஔவையார்
பொது அறிவு :
01. நவீன நீர்மூழ்கிக் கப்பல்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
ஜான் பிலிப் ஹாலண்ட், John Philip Holland
02.தமிழ்நாட்டில் வட காவிரி என்று அழைக்கப்படும் நதி எது?
கொள்ளிடம் ஆறு- Kollidam river
English words :
Serene – Calm, peaceful, and untroubled
Ambiguous – Having more than one meaning; unclear
தமிழ் இலக்கணம்:
கற்போம் தமிழ்
கையெழுத்து, கையொப்பம் இரண்டும் ஒன்றா வேறு வேறா?
இரண்டும் ஒன்று அல்ல. எப்படி என்று காண்போம் வாருங்கள்
கையெழுத்து என்பது ஒருவர் பொதுவாக கைப்பட எழுதும் எழுத்து (எழுத்து வடிவம்) ஆகும்.
பயன்பாடு - கடிதம், பாடக் குறிப்புகள் எழுத பயன்படுகிறது
கையொப்பம் என்பது ஒரு நபர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த ஆவணங்களில் இடும் தனித்துவமான, மாற்ற முடியாத கையெழுத்து (signature) ஆகும்
பயன்பாடு:
கையொப்பம் வங்கி, பத்திரம், அலுவலக ஆவணங்களில் சட்டப்பூர்வ சான்றாகப் பயன்படுகிறது.
கையெழுத்தை சூழலுக்கு ஏற்ப மாற்றலாம் (நிதானமாக, வேகமாக), ஆனால் கையொப்பத்தை அடிக்கடி மாற்றக்கூடாது.
அறிவியல் களஞ்சியம் :
மனித மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ வின் எண்ணிக்கை சுமார் 3 பில்லியன் அடிப்படை ஜோடிகளும், சுமார் 25,000 மரபணுக்களும் (ஜீன்ஸ்) உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
ஏப்ரல் 02
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் (International Children’s Book Day – ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805–1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும்.[1] "இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்" (International Board on Books for Young People – IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்
குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்
நீதிக்கதை
நண்டு, கொக்கைக் கொன்ற கதை
ஒரு பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தின் கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.
துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது.
“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.
“மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன்.
“அதை ஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.
“பரவாயில்லை சொல்லுங்களேன்”
“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”
மீனுக்குப் பரபரத்தது.
“சொன்னால்தானே தெரியும்”
“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.
“வரட்டுமே”
“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”
“அய்யய்யோ!”
உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.
சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.
அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.
“நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இரக்கம் கசிய.
மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின. “அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.
கொக்குக்கும் கசக்குமா காரியம்? நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலர வைத்தது.
குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. “ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.
வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கவ்விக்கொண்டு பறந்தது. பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.
அதற்கு “பக்” கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா?
உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.
“கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.
“அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”
“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”
“ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.
குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.
அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன. வஞ்சமனத்தானின் உபாயமும் அபாயமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.
இன்றைய செய்திகள்
02.04.2026
⭐ஓஎன்ஜிசி நிறுவனம், 'தாமன் அப்சைட் டெவலப்மென்ட்' திட்டத்தின் மூலம் எரிவாயு உற்பத்தியை தொடங்கியுள்ளது.
⭐இந்தியாவில் விமான எரிபொருள் விலை இரு மடங்கு அதிகரிப்பு: 1000 லிட்டர் ரூ.2.07 லட்சமாக உயர்வு.
⭐போரால் இஸ்ரேல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
⭐ இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிசிடிவி.
கேமராக்களில் மூன்றில் ஒரு பங்கு சீனா தயாரிப்புகள் ஆகும்.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அரை சதம் அடித்த இரண்டாவது அதிவேக பேட்ஸ்மேன்வைபவ் சூர்யவன்ஷி அரை சதம் விளாசியது ஐபிஎல்லில் புதிய சாதனையாக அமைந்தது.
Today's Headlines
⭐ Oil and Natural Gas Corporation has started gas production through the “Daman Upside Development” project.
⭐ Aviation fuel prices in India have doubled: 1000 liters have increased to
₹ 2.07 lakh.
⭐ Due to the war, the normal life of people in Israel has been affected.
⭐ One-third of the CCTV cameras sold in India are manufactured in China.
SPORTS NEWS
🏀 Vaibhav Suryavanshi, playing for Rajasthan Royals, scored a half-century and became the second - fastest batsman to achieve this milestone, setting a new record in the Indian Premier League.
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment