Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.03.2026

 Zeal study official school morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.03.2026



யூரி ககாரின்





 







திருக்குறள்: 


அதிகாரம் 62 / CHAPTER 62 


 ஆள்வினை உடைமை 


குறள் 611: 


அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் 

பெருமை முயற்சி தரும்.


 விளக்க உரை: 


இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்.  அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.


பழமொழி :

A good marksman may miss. 


ஆனைக்கும் அடி சறுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :.


1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.


2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.


பொன்மொழி : 


மனித வாழ்க்கை மற்றவைகளுக் கெல்லாம் மேலானது.மேலான செயல்களினால் மேன்மை அடைகிறது


-----------------பிளாட்டோ


Human life is above all others. It is exalted by superior actions. ----- PLATO


பொது அறிவு : 


01.சூரிய குடும்பத்தில் எந்த கிரகம் பின்னோக்கி சுழல்கிறது?


             வெள்ளி -Venus


02.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பிரமிடுகளைக் கொண்ட நாடு எது?


           சூடான் -Sudan


English words :


Take off -remove or leave


Take on- accept responsibility


தமிழ் இலக்கணம்: 


 தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும்

1. கடிகாரம் வேகமாக ஓடியது (எங்கு ஓடும்?)

      கடிகாரம் வேகமாக இயங்கியது

2. மின்விசிறி வேகமாக சுற்றுகிறது ( தன்னைத் தானே சுற்றுவதால் சுழல்கிறது)

மின்விசிறி வேகமாக சுழல்கிறது

    தொடரும்...

அறிவியல் களஞ்சியம் :


நிலை: துருவங்கள் காந்தத்தின் இரு முனைகளில் மட்டுமே இருக்கும். காந்தப் புலம் காந்தத்தைச் சுற்றியுள்ள முழுவெளியிலும் பரவியிருக்கும்.


பரிமாணம்: துருவம் என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளி (point), காந்தப் புலம் என்பது ஒரு பகுதி (region/field).


தொடர்பு: காந்தப் புலக் கோடுகள் ஒரு துருவத்தில் தொடங்கி மற்றொரு துருவத்தில் நுழைகின்றன. 


துருவ காந்தம் என்பது காந்தப்புலத்தின் வலிமை குவியும் இடம்


மார்ச் 09


யூரி ககாரின் அவர்களின் பிறந்தநாள்


யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin,9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.


சாகீர் உசைன் அவர்களின் பிறந்தநாள்






சாகீர் உசைன் (Zakir Hussain, இந்தி: ज़ाकिर हुसैन, 9 மார்ச்சு 1951 – 15 திசம்பர் 2024) இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகன்.[1] இவர் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படுகிறார். மும்பையில் பிறந்தார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்


நீதிக்கதை


 நாவினால் சுட்ட வடு


ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.


நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.


அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.


ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.


முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!


நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.


அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான்


அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.


எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.


ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.


மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.


இன்றைய செய்திகள்


09.03.2026


⭐கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் முழு உருவ சிலையை முதலமைச்சர்  திறந்து வைத்தார்.


⭐தெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு- அமில மழை எச்சரிக்கை விடுத்த  ஈரான்


⭐ ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா இஸ்ரேல் படைகள் சரமாரி குண்டுவீச்சு.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. வருகிற 15-ந்தேதி தொடங்கும் போட்டியை முன்னிட்டு 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.


Today's Headlines


⭐ The Chief Minister inaugurated a full-size statue of K. B. Sundarambal at Kodumudi.


⭐ An oil storage facility caught fire in Tehran, and Iran has issued a warning about possible acid rain.


⭐ The oil depots in Iran were heavily bombed by the forces of United States and Israel.


🏀 Sports News


🏀 South Africa national cricket team will participate in a five-match international T20 series to be held in New Zealand.Ahead of the series starting on the 15th, a 15-member squad for South Africa has been announced.


Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: Tamil Quiz - Model Test 16 தமிழ் மாதிரித் தேர்வு - 16 (பழமொழி, திருநெல்வேலி & இலக்கணம்)

 இதில் பழமொழி நானூறு, திருநெல்வேலி வரலாறு, சிற்றிலக்கியங்கள் மற்றும் இலக்கணப் பகுதியான அணிகள் தொடர்பான அனைத்து வினாக்களும் இடம்பெற்றுள்ளன.தேர்வு முடித்த பின் விடைகளை மேலே scroll பண்ணி பார்க்கவும்.நன்றி 

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Followers