Skip to main content

Zeal study TNTET Social study materials -தமிழ்நாட்டின் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், அகழாய்வு இடங்கள் மற்றும் அசோகர் காலத்துச் செய்திகள்"

தமிழகத்தின் தொல்லியல் ஆய்விடங்கள்
ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி): இங்கு முதுமக்கள் தாழிகள், இரும்பாலான கத்திகள், ஈட்டிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் கண்டறியப்பட்டன.
கீழடி (சிவகங்கை): செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இது ஒரு நகர நாகரிகம்.
கொடுமணல் (ஈரோடு): பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள இவ்வூரில் சிவப்பு நிற மணிக்கற்கள் (Carnelian) கண்டறியப்பட்டன.
பையம்பள்ளி (வேலூர்): இங்கு இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதன் காலம் கி.மு 1000 என கணிக்கப்பட்டுள்ளது.
. பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்
முதுமக்கள் தாழிகள்: இறந்தவர்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண்பானைகள்.
கற்திட்டைகள் (Dolmens): இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் கற்பலகைகள் நட்டு, அவற்றின் மேல் மற்றொரு கற்பலகையைப் படுக்கை வசத்தில் வைத்தல்.
நினைவுத் தூண்கள் (Menhirs): ஒரே கல்லிலான தூண்கள் இறந்தோரின் நினைவாகச் செங்குத்தாக நடப்படும்.
நடுகற்கள்: இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல்.
. அசோகர் மற்றும் மௌரியப் பேரரசு
தர்மச் சக்கரம்: சாரநாத் அசோகர் தூணில் உள்ள 24 ஆரக்கால்களைக் கொண்ட சக்கரம் இந்தியத் தேசியக் கொடியின் மையத்தில் உள்ளது.
கல்வெட்டு எழுத்துமுறை: சாஞ்சி - பிராமி; காந்தகார் - கிரேக்கம் மற்றும் அராமிக்; வடமேற்குப் பகுதி - கரோஸ்தி.
ஏற்றுமதி: நறுமணப் பொருட்கள், முத்துக்கள், வைரம் மற்றும் பருத்தித் துணிகள்.
தமிழகத்தின் பெருங்கற்காலம் / இரும்புக்காலம்
இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் எனப்பட்டது. இப்பண்பாட்டின் காலம் கி.மு (பொ.ஆ.மு) 1000 என கணிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்விடங்கள்
ஆதிச்சநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம்.
கீழடி: சிவகங்கை மாவட்டம்.
பொருந்தல்: திண்டுக்கல் மாவட்டம்.
பையம்பள்ளி: வேலூர் மாவட்டம் (இங்கு இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன).
கொடுமணல்: ஈரோடு மாவட்டம்.
நினைவுச் சின்னங்கள்
முதுமக்கள் தாழிகள்: இறந்தவர்களைப் புதைக்க பயன்படுத்தப்பட்ட பெரிய மண்பானைகள்.
கற்திட்டைகள்: இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் செங்குத்தாக நடப்பட்ட இரு கற்பலகைகளின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படுவது.
நினைவு கற்கள்: ஒரே கல்லிலான தூண்கள் இறந்தோரின் நினைவாக செங்குதாக நடப்படும்.
நடுகற்கள்: இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல்.
2. அறிவுமலர்ச்சிக் காலம் (கி.மு. 6-ஆம் நூற்றாண்டு)

வரலாற்று அறிஞர் வில் டூராண்ட் இக்காலத்தை "நட்சத்திரங்களின் மழை" என்று வர்ணிக்கிறார்.
சமண மதம்
சமணம் 24 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது.
முதல் தீர்த்தங்கரர் - ரிஷபர்; கடைசி தீர்த்தங்கரர் - மகாவீரர்.
மகாவீரர்: இயற்பெயர் வர்த்தமானர். பீகாரின் குந்தகிராமத்தில் பிறந்தார். 12½ ஆண்டு தவத்திற்குப் பின் 'கைவல்ய' நிலையை அடைந்தார்.
திரிரத்தினங்கள்: நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்.
பிரிவுகள்: திகம்பரர், சுவேதாம்பரர்.
ஆகம சித்தாந்தம்: மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தவர் அவரது தலைமைச் சீடர் கௌதமசுவாமி.
பௌத்த மதம்
நிறுவியவர் கௌதம புத்தர் (இயற்பெயர்: சித்தார்த்தர்).
நேபாளத்தின் லும்பினி தோட்டத்தில் பிறந்தார்.
முதல் சொற்பொழிவு: வாரணாசி அருகில் உள்ள சாரநாத் (தர்ம சக்ர பிரவர்த்தனா).
பௌத்த மாநாடுகள்: 1. இராஜகிருகம், 2. வைசாலி, 3. பாடலிபுத்திரம், 4. காஷ்மீர்.
முக்கிய இடங்கள்: சைத்தியம் (கோவில்/தியானக்கூடம்), விகாரைகள் (துறவிகள் வாழ்விடங்கள்), ஸ்தூபி (புத்தர் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டவை).
3. மௌரியப் பேரரசு
இந்தியாவின் முதல் பெரிய பேரரசு இதுவாகும்.
முக்கிய அரசர்கள்
சந்திரகுப்த மௌரியர்: இப்பேரரசை மகதத்தில் நிறுவினார். இவர் சமணத் துறவி பத்ரபாகுவுடன் தென்னிந்தியா வந்து, 'சல்லேகனா' (உண்ணா நோன்பு) இருந்து உயிர் துறந்தார்.
பிந்துசாரர்: கிரேக்கர்கள் இவரை 'அமிர்தகா' (எதிரிகளை அழிப்பவன்) என அழைத்தனர்.
அசோகர்: 'தேவனாம்பிரியர்' என்று அழைக்கப்பட்டார். கி.மு. 261-இல் கலிங்கப் போர் வென்றார். பாடலிபுத்திரத்தில் 3-வது பௌத்த மாநாட்டை கூட்டினார்.
முக்கிய குறிப்புகள்
மெகஸ்தனிஸ்: கிரேக்க தூதுவர்; இவர் எழுதிய நூல் 'இண்டிகா'.
நாளந்தா: "வற்றாத அறிவை அளிப்பவர்" என்று பொருள். இது பிற்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
தேசிய சின்னம்: சாரநாத்திலுள்ள அசோகருடைய தூணின் சிங்க உருவங்கள் நமது தேசியச் சின்னமாக உள்ளது

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: Tamil Quiz - Model Test 16 தமிழ் மாதிரித் தேர்வு - 16 (பழமொழி, திருநெல்வேலி & இலக்கணம்)

 இதில் பழமொழி நானூறு, திருநெல்வேலி வரலாறு, சிற்றிலக்கியங்கள் மற்றும் இலக்கணப் பகுதியான அணிகள் தொடர்பான அனைத்து வினாக்களும் இடம்பெற்றுள்ளன.தேர்வு முடித்த பின் விடைகளை மேலே scroll பண்ணி பார்க்கவும்.நன்றி 

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Followers