Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.2025

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.2025

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்








திருக்குறள்:

குறள் 463:

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.

விளக்க உரை:

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

பழமொழி :
The darkest night produces the brightest stars.

மிக இருண்ட இரவை பிரகாசமான நட்சத்திரங்களை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.

2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

உயர்ந்த தவம்-பொறுமை. உயர்ந்த ஆயுதம்- மன்னிப்.பு உயர்ந்த மகிழ்ச்சி-திருப்தி . -குரு நானக்

பொது அறிவு :

01."பிக் ஆப்பிள்" என்றழைக்கப்படும் அமெரிக்க நகரம் எது?

நியூயார்க் - Newyork City

02."திருமறைக்காடு" என்று அழைக்கப்படும் ஊர் எது?

வேதாரண்யம் -, நாகப்பட்டினம்
Vedaranyam -Nagapattinam
English words :

stand out – noticable, தனித்துவமாக தெரிதல். stick to – follow strictly ஒரு விதியை, ஒழுங்கை அல்லது ஒரு செயலைத் தவறாமல் பின்பற்றுவது.

Grammar Tips:

Common mistakes with cut

1. Cut your nails X


       Clip your nails ✓

2. Cut your hair X


       Trim your hair ✓

3. Cut the bread X


       Slice the bread ✓
4. Cut the grass X
Mow the grass ✓

அறிவியல் களஞ்சியம் :

கண்ணீரைத் தோற்றுவிக்கும் சுரப்பி கண்ணீர் சுரப்பி (Lachymal gland) என அழைக்கப்படுகிறது. கண்ணீர் என்பதற்கான லத்தீன் மொழிச் சொல் லக்ரிமா (Lacryma) என்பதாகும். அச்சுரப்பி கிட்டத்தட்ட வாதுமைக் கொட்டை அளவு வடிவில் (Almond nut) கண்ணின் மேலே அமைந்துள்ளது. ஆறு அல்லது ஏழு நுண்ணிய நரம்புக் குழாய்களால் கண்விழியில் மேற்பரப்பில் அது திறந்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் கண்மூடித் திறக்கும்போது (blink) கண்ணின் மேற்பரப்பு முழுமையும் பரப்பலாகிறது. மேல் கீழ் கண்ணிமைகள் சேருமிடத்தில் தேவைக்கு மேலான நீர் சேகரிக்கப்பட்டு கண்ணின் உள் மூலையில் இரண்டு வாய்க்கால் வழியே வந்து மூக்கின் அருகிலுள்ள கண்ணீர்ப் பைக்கு எடுத்து வரப்படுகிறது.

செப்டம்பர் 18

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ஆம் தேதி உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது உலகில்  நீருக்கான  நெருக்கடி மற்றும்  நீர் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் என்பதும் மிக அவசியான ஒரு நாளாக மாறியுள்ளது.
நீதிக்கதை

மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.

விரல்களால் மணல் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்! என்று எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.

நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி, இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.

இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா? என்றான். அதற்கு நண்பன், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்! என்று பதில் கூறினார்.
இன்றைய செய்திகள்

18.09.2025

⭐ தொடர்ந்து குண்டு மழை ஏமன் துறைமுக நகரம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

⭐டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

⭐ வாக்கு திருட்டு, வாக்கு இயந்திரங்களில் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் S.Yகுரேஷி வலியுறுத்தி உள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

🏀கிரிக்கெட் வாரியத்தின் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஆர்.பி.சிங், ஓஜா நியமனம்

Today's Headlines

⭐ Israeli airstrikes continue on Yemeni port city

⭐At least 15 people have been killed in a cloudburst that flattened the city of Dehradun.

⭐ Former Chief Election Commissioner S.Y. Qureshi has urged the Election Commission of India to conduct a proper investigation into allegations of vote rigging and irregularities in voting machines.

*SPORTS NEWS*

🏀The World Athletics Championships are underway in the Japanese capital Tokyo. India's Neeraj Chopra performed well in his first attempt in today's competition.

🏀RB Singh, Ojha appointed as new selection committee members of the Cricket Board.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: Tamil Quiz - Model Test 16 தமிழ் மாதிரித் தேர்வு - 16 (பழமொழி, திருநெல்வேலி & இலக்கணம்)

 இதில் பழமொழி நானூறு, திருநெல்வேலி வரலாறு, சிற்றிலக்கியங்கள் மற்றும் இலக்கணப் பகுதியான அணிகள் தொடர்பான அனைத்து வினாக்களும் இடம்பெற்றுள்ளன.தேர்வு முடித்த பின் விடைகளை மேலே scroll பண்ணி பார்க்கவும்.நன்றி 

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Followers