Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2025

 Zeal study official school morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2025


PDF LINK

Zeal study official school morning prayer activities   பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2025

திருக்குறள்: 


குறள் 212: 


தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு 

வேளாண்மை செய்தற் பொருட்டு         


விளக்க உரை: 


ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.


பழமொழி :

The roots of education are bitter,but the fruit is sweet. 


கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழம் இனிப்பாகும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.


2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :


இந்த உலகில் நம் கண்ணுக்குத் தெரியும் மனிதர்களை நேசிக்கத் தெரியாவிட்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளின் மீது அன்பு செலுத்தி எந்த பயனும் இல்லை - அன்னை தெரசா


பொது அறிவு : 


01.தும்பா ராக்கெட் ஏவுதளம் எங்கு உள்ளது?



திருவனந்தபுரம்- கேரளா

Trivandrum- Kerala


02.இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்? 


டி. ஐசன் ஹோவர்-1959

D. Eisenhower -1959

English words :


sector - a part of an area or country or of a large group of people.ஒரு நாட்டின் அல்லது ஒரு பெருங் குழுவின் கிளைப்பகுதி.


Grammar Tips :


Difference between time and period 




Time can be general


Ex: "The meeting is at 2 PM."(No point of ending)


The period is more specific and defined. 



Ex: "The rainy period lasted for a month."(Both beginning and end)


அறிவியல் களஞ்சியம் :


 அன்டிரியஸ் வெசலியஸ் (Andreas Vesalius) (1514-64) என்பவர் தாம் தற்கால உடலுறுப்பியல் (Modern anatomy) பற்றி அடிக்கல் இட்டு ஆய்வு தொடங்கியவர். மருத்துவக் குடும்பத்தில் பிரஸ்ஸலில் (Brussels) பிறந்தவரானார். ஐரோப்பாவிலுள்ள மிகப் பெரிய மருத்துவ மையங்களுள் ஒன்றான இத்தாலியில் (Italy) உள்ள பதுஆ (Padua) வில் தன் 23 ஆம் வயதில் உடலுறுப்பியல் பேராசிரியரானார்.


ஆகஸ்ட் 04


பராக் உசைன் ஒபாமா  அவர்களின் பிறந்தநாள்


பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகத்து 4, 1961), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

நீதிக்கதை


 வல்லவர் யார்?




ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது. அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது. 




மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்றுவிட்டது. பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம். அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது. 


அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப்போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது. பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது. 




எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது. 




நீதி :


எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு.



இன்றைய செய்திகள்


04.08.2025


⭐பொறியியல் கல்லூரிகள்: முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு.


⭐விமானத்தின் உள்ளே சக பயணியை தாக்கிய நபருக்கு இண்டிகோ விமானத்தில் வாழ்நாள் பயணத் தடை.


⭐ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை ராணுவ வீரர் காயம்.


⭐இந்தோனேசியாவில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய எரிமலை


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி பந்தில்  வெற்றி


🏀ஆசிய கோப்பை டி20 தொடர்: துபாயில் மோதும் இந்தியா பாகிஸ்தான்



Today's Headlines


⭐Engineering Colleges: First Year Classes Commencement Date Announced.


⭐Lifetime  Ban in the IndiGo Flight for Man Who Attacked Fellow Passenger Inside the IndiGo Flight.


⭐ In Jammu and Kashmir,3 terrorists were shot and killed, and a soldier was injured.


⭐In Indonesia, there is a successive volcanic eruption.


 SPORTS NEWS 


🏀 2nd T20I vs Pakistan: West Indies won on the last ball 


🏀Asia Cup T20I Series: India vs Pakistan in Dubai



Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Followers