Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.03.2025

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.03.2025

 






திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: சான்றாண்மை

குறள் எண்:984
கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

பொருள்: தவம் என்பது எவ்வுயிரையும் கொல்லாமை; பிறர் குறையை கூறாமை சான்றாண்மை எனப்படும்.

பழமொழி :
செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்.

Whatever is worth doing, is worth doing well.

இரண்டொழுக்க பண்புகள் :  

*  பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.                    

*பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன் .

பொன்மொழி :

ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம்.

பொது அறிவு :

1. தாமரைக் கோயில் எங்கே அமைந்துள்ளது?

விடை:  டெல்லி.      

2. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் யார்?

விடை:  குதிராம் போஸ்

English words & meanings :

Actor.   -    நடிகர்

Actress.    -    நடிகை

வேளாண்மையும் வாழ்வும் :

பயிர் வேர் மண்டல மண்ணில் அதிகப்படியான நீர் வளர்ச்சியைத் தடுக்கிறது, குறிப்பாக முக்கிய பயிர் நிலைகளில். வயலில் நீர் தேங்குவது கசிவு அல்லது அதிகப்படியான மண் உப்புத்தன்மைக்கு வழிவகுக்கும்.

நீதிக்கதை

  பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ண

தேவராயருக்குப்

பிறந்தநாள் விழா.

நகரமெல்லாம்

தோரணம், வீடெல்லாம்

அலங்காரம்! மக்கள்

தங்கள் பிறந்த நாள்

போல மன்னரின் பிறந்த

நாளை மகிழ்ச்சியோடு

கொண்டாடினர்.

மறுநாள் அரச சபையில்

அரசருக்கு மரியாதை

செலுத்துதல் நடந்தது.

முதலில் வெளி

நாடுகளிலிருந்து வந்த

அரசப் பிரதிநிதிகள்,

தங்கள் நாட்டு

மன்னர்கள் அனுப்பிய

பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப்

பிரதிநிதிகள், பொது

மக்கள், மன்னருக்கு

பரிசளித்து மரியாதை

செலுத்தினார்கள்.

அதன்பிறகு அரசரின்

நெருங்கிய நண்பர்கள்

தங்கள் பரிசுகளை

அளித்தனர்.

அப்போதுதான்

பெரியதொரு

பொட்டலத்துடன்

தெனாலிராமன்

உள்ளேநுழைந்தான்.

அரசர் உள்பட

எல்லாரும் வியப்போடு

பார்த்தனர்.

மற்றவர்களிடம்

பரிசுகளை வாங்கித்

தன் அருகே

வைத்த மன்னர்,

தெனாலிராமன்

கொண்டு வந்த பரிசுப்

பொட்டலம் மிகப்

பெரிதாக இருந்ததால்

அவையில்உள்ளவர்கள்

ஆவலோடு என்ன பரிசு

என்று பார்த்ததால்

அந்தப் பொட்டலத்தைப்

பிரிக்கும்படி

தெனாலிராமனிடம்

கூறினார் அரசர்.

தெனாலிராமன்

தயங்காமல்

பொட்டலத்தைப் பிரித்தான்.

பிரித்துக் கொண்டே

இருந்தான். பிரிக்கப்

பிரிக்கத் தாழைமடல்கள்

காலடியில் சேர்ந்தனவே

தவிர பரிசுப் பொருள்

என்னவென்று

தெரியவில்லை.

அதனால் எல்லாரும்

ஆவலுடன் கவனித்தனர்.

கடைசியில் மிகச்சிறிய

பொட்டலமாக இருந்ததைப்

பிரித்தான். அதற்குள்

நன்றாகப் பழுத்துக்

காய்ந்த புளியம்பழம்

ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச்

சிரித்தனர்.அரசர்

கையமர்த்திசிரிப்பு

அடங்கியவுடன்,

”தெனாலிராமன்

கொடுத்த பரிசு சிறிதாக

இருக்கலாம். அதற்கு

அவன் கொடுக்கப்

போகும் விளக்கம் பெரிதாக

இருக்கலாமல்லவா?” என்று

அவையினரைப் பார்த்துக்

கூறிவிட்டு தெனாலிராமன்

பக்கம் திரும்பி, “”ராமா

இந்த சிறிய பொருளைத்

தேர்ந்தெடுத்ததின்

காரணம் என்ன?” எனக்

கேட்டார்.

“அரசே, ஒரு நாட்டை

ஆளும் மன்னர் எப்படி

இருக்க வேண்டும் என்ற

தத்துவத்தை விளக்கும்

பழம் புளியம்பழம்

ஒன்று தான். மன்னராக

இருப்பவர் உலகம்

என்ற புளிய மரத்தில்

காய்க்கும்பழத்தைப்

போன்றவர். அவர்

பழத்தின் சுவையைப்

போல இனிமையானவராக

இருக்க வேண்டும்.

“அதே நேரத்தில்

ஆசாபாசங்கள் என்ற

புளியம்பழ ஓட்டில்

ஒட்டாமலும் இருக்க

வேண்டும் என்பதை

விளக்கவே இந்த

புளியம்பழத்தைப்

பரிசாகக் கொண்டு

வந்தேன். புளியம்பழமும்

ஓடும்போல

இருங்கள்!” என்றான்.

அவையினர் கைதட்டி

ஆரவாரம் செய்தனர்.

மன்னர் கண்கள் பனிக்க

ஆசனத்தைவிட்டு எழுந்து

தெனாலிராமனைத் தழுவி,

“ராமா எனக்குச் சரியான

புத்தி புகட்டினாய். ஒரு

பிறந்த நாள் விழாவிற்கு

இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

”பொக்கிஷப் பணமும்

பொது மக்கள் பணமும்

வீணாகும்படி செய்து

விட்டேன்.உடனே

விசேடங்களை

நிறுத்துங்கள். இனி

என் பிறந்தநாளன்று

கோயில்களில் மட்டுமே

அர்ச்சனை ஆராதனை

செய்யப்பட வேண்டும்.

அவசியமில்லாமல்

பணத்தை ஆடம்பரமாகச்

செலவு செய்யக்கூடாது,”

என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின்

துணிச்சலையும்

சாதுரியத்தையும்

எல்லாரும்

பாராட்டினர்.

இன்றைய செய்திகள்

07.03.2025

* ரூ.274 கோடியில் ஒன்றரை ஆண்டாக நடந்துவந்த எழும்பூர் - கடற்கரை 4-வது பாதை பணி நிறைவு: விரைவில் சோதனை ஓட்டம்.

* நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளால் 2 மாதத்தில் 550 அவமதிப்பு வழக்குகள் தாக்கல் - நீதிபதி அதிருப்தி.

* மணிப்பூரில் ஒரு மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மற்றும் 4.1 அலகுகளாக பதிவானது.

* பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தா, அரவிந்த் முன்னிலை.

* ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் பிரனாய் தொடக்க சுற்றில் வெற்றி.

Today's Headlines

* Chennai's Ezhumbur - Marina 4th line project completed at a cost of ₹274 crores; trial run soon.

* Court expresses dissatisfaction over non-compliance with its orders, says 550 contempt cases filed against officials in 2 months.

* Two earthquakes hit Manipur within an hour, measuring 5.7 and 4.1 on the Richter scale.

* ₹80,000 crore worth of gold reserves discovered in Pakistan's Sindh region.

* Indian chess players Praggnanandhaa and Aravindh lead in the Braintree Masters International Chess Tournament.

* Indian shuttler Pranav wins in the opening round of the Orleans Masters Badminton Tournament.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -7th Tamil - கவிதைப்பேழை | விருந்தோம்பல் | பருவம் 3

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Followers