Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2024

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2024
  




PDF LINK 

Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2024




திருக்குறள்:

"பால்: பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்:848

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.

பொருள்:தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய்,தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்."

பழமொழி :
Well began is half done

நல்ல தொடக்கம் பாதி வெற்றி

இரண்டொழுக்க பண்புகள் : 

*புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்

*பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்

பொன்மொழி :

தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார் -- பிடல் காஸ்ட்ரோ

பொது அறிவு :

1. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?

விடை: 27

2. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது?

விடை: கால்சியம் பாஸ்பேட்

English words & meanings :

Proud     -  பெருமை

Sad       -   சோகம்

வேளாண்மையும் வாழ்வும் :

நோய்க் கட்டுப்பாடு திட்டத்தில் முதன்மையானது, தாவரங்கள் பயிரிடும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, நோயுற்ற அல்லது இறந்து விட்ட தாவரங்களை அகற்றுவதும், தாவரங்களுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றைப் பெற்று ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதுமாகும்

டிசம்பர் 05

கல்கி அவர்களின் நினைவுநாள்



கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்
நீதிக்கதை

கடல்

கடலில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அன்று  அவர் நினைத்ததை விடவே அதிகமான மீன்கள் கிடைத்தன. எனவே கடற்கரையில் அவர் "இக்கடல் பெரும்  கொடையாளி" என்று எழுதினார்.

இளைஞர் ஒருவர் கடலில் முத்துக்களை வேட்டையாடிக் கொண்டு கரைக்கு திரும்பினார். அவர் கடற்கரையில், "இந்த கடல் ஒன்றே போதும் நான் மகிழ்ச்சியுடன் வாழ" என்று எழுதினார்.

கடற்கரையில் பந்து விளையாடி கொண்டு இருந்த சிறுவனின் பந்தை, கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அப்போது அந்த சிறுவன் கடற்கரையில், " இந்த கடல் பெரும் தொல்லை" என்று எழுதினான்.

முதிய பெண்மணி  ஒருவரின் பொருட்களை கடலலை இழுத்துச் சென்று விட்டது. அப்போது அந்த பெண்மணி கடற்கரையில், " இந்த கடல் மிகவும் பேராசை கொண்டது" என்று எழுதினார்.

ஆனால் கடலோ இவர்கள் எழுதியது அனைத்தையும்  அலை ஒன்றை அனுப்பி அழித்துவிட்டு சென்றது.

மனிதா! இவ்வாறு பிறர் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாதே.இந்த உலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறார்கள்.

உன்னுடைய நட்பும் சகோதரத்துவமும் நிலைக்க வேண்டும் எனில்,நீ பிறரின் தவறுகளை  உன் மனதில் இருந்து அழித்துவிடு. வாழ்க்கை சிறக்கும்.

இன்றைய செய்திகள்

05.12.2024

*/இன்று மாலை 4.08 மணி அளவில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த , இஸ்ரோவின் PSLV-C59 ராக்கெட்டானது, நாளை மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

* ஸ்காட்லாந்து நாட்டில் கலங்கரை விளக்கத்தில் 132 வருடத்திற்கு முந்தைய பாட்டில் கிடைத்துள்ளது அதனுள் ஒரு கடிதமும் உள்ளது. பறவை இறகு மற்றும் மை மூலம் இது எழுதப்பட்டுள்ளது.

* மலேசியா, தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

* வெம்பக்கோட்டை அகழாய்வில் மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுப்பு

* இந்தியா-பூடான் இடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வருகிறது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

Today's Headlines

* ISRO's PSLV-C59 rocket, which was scheduled to be launched at 4.08 pm today, has been postponed to tomorrow evening, ISRO said.

* A 132-year-old bottle containing a letter has been found in a lighthouse in Scotland. It was written in bird feathers and ink.

* 30 people have died in Malaysia and Thailand due to rain and floods.

* Beads, conch bracelets found in Vembakottai excavations

* The close friendship between India and Bhutan continues. To further strengthen this friendship, Bhutanese King Jigme Khesar Namgyal Wangchuck will arrive in India today  on a two-day visit.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 Tamil Quiz - Test 38

TNTET 2026 Tamil Quiz - Test 38 | Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 38 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் தொடங்க

Zeal Study TNTET 2026 KALVI TV Psychology Quiz - Part 10 - கல்வி உளவியல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

kALVI TV TNTET 2026 Psychology Quiz - Part 10 | Zeal Study TNTET 2026 - கல்வி உளவியல் (உயர்மட்ட வினாடி வினா) வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் | Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

TNTET 2026: ZEAL STUDY மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (55 வினாக்கள்) PSYCHOLOGY

TNTET 2025 Psychology Quiz TNTET 2026: உளவியல் மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் [Excel Academy] விடைகளைச் சரிபார்க்கவும்

TNTET 2026: Educational Psychology / கல்வி உளவியல் வினாடி வினா

TNTET Psychology Quiz - 30 Questions TNTET 2026: Educational Psychology கல்வி உளவியல் வினாடி வினா Next Question / அடுத்த கேள்வி Test Completed! / தேர்வு முடிந்தது! Your Final Score / உங்கள் மொத்த மதிப்பெண்: Retake Test / மீண்டும் முயற்சி செய்

Followers