Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2024

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2024


இதன் PDF பெற

Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2024

திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்:கல்லாமை

குறல் எண்:407

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

பொருள்: நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு,
மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

பழமொழி :
Blessed are the meek: for they shall inherit the earth.

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.


பொன்மொழி :

விடாமல் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்களைத்தான் வெற்றி தேடி வரும்"---ஜவஹர்லால் நேரு

பொது அறிவு :

1. பழங்காலத்தில் “சேரன் தீவு” என அழைக்கப்பட்ட நாடு எது?

விடை: இலங்கை

2. “ஜனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை: ஆப்ரகாம் லிங்கன்
English words & meanings :

callous-கடுமையான, heartless- இரக்கமற்ற
வேளாண்மையும் வாழ்வும் :

இப்படி அனைத்து வேளாண்மையிலும் செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்து குறைவது மட்டும் இன்றி மண்ணின் வளத்தையும் பாதிக்கின்றன.

ஜூலை 01

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.[1] 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார்.[2] இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.

கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்த நாள்

கல்பானா சாவ்லா ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனை

நீதிக்கதை

சமயோஜித  புத்தி

முன் ஒரு  காலத்தில் புகழ்பெற்ற தலைவர் ஒருவர் இருந்தார்.

தந்திரமான போர் குணம் கொண்டவர். ஒரு நாள் ஒரு மாநாட்டை முடித்துக் கொண்டு

தனது  பாதுகாப்பு  படையுடன் நாட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

வழியில்  பயணக் களைப்பு தீர ஓரிடத்தில் முகாமிட எண்ணினர். கொஞ்சம் வீரர்களை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டு மீதி பாதுகாப்பு படைவீரர்களை  வேறொரு இடத்தில் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்.

தலைவர் பாதுகாப்பு படை இன்றி இருப்பதை அறிந்த  அவரின் எதிரிகள் ஆயிரக்கணக்கான படை வீரர்கள் சூழ அவருடைய இருப்பிடம் நோக்கி வர தொடங்கினர்

நடு ராத்திரியில் அவர் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த தகவல் அவருக்கு கிடைத்தது. குறைவான எண்ணிக்கையில் உள்ள படைவீரர்களைக் கொண்டு அவர்களை சமாளிக்க இயலாது என்று யோசித்தார்.

உடனே அவர் தம் வீரர்களுக்கு கட்டளையிட அவர்கள் அந்த இடத்தில் எதுவும்  இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டு அவர்களும் மறைவான இடங்களில் தனித்தனியாக மறைந்து கொண்டனர்.

தலைவரும் தன்னுடைய பாதுகாப்பு கவசங்களை எல்லாம் கழற்றி விட்டு அங்கே அமர்ந்து வீணை வாசிக்க  தொடங்கினார். 

சற்று நேரத்தில் அங்கே வந்த எதிரி நாட்டுப் படைகள் அவர் தனியே வீணை வாசித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தனர்.

எதிரி நாட்டு படையின்   தலைவர் இவர் சாதாரணமான முறையில் வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்றால் நம்மை பிடிக்க வேறு ஏதேனும் தந்திர வழியில் படை வீரர்களை மறைத்து வைத்திருப்பாரோ என்று யோசித்தார்.

எனவே படைகளுடன் பின்வாங்கினார்.

எப்போதும் பிரச்சினையை கண்டு பயப்படாமல்  சமயோஜித  புத்திக்கொண்டு  தீர்க்க வேண்டும்

இன்றைய செய்திகள்

01.07.2024

# வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் நியமனம்: 133 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் தமிழக முதல்வர்.

# சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.14.56கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

# தமிழக காவல் துறையினருக்கு பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

# கடும் வெப்ப அலையில் 62 கோடி பேர் இந்தியாவில் பாதிப்பு:அமெரிக்காவின் பருவநிலை மத்திய ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகள் குழு  வெளியிட்ட அறிக்கை தகவல்.

# சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலத்தில் எரிபொருள் கசிவு: சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்.

# சர்வதேச டி20 கிரிக்கெட்: விராட், ரோகித் வரிசையில் ஜடேஜாவும் ஓய்வு அறிவிப்பு.

# ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து அணி.

# ஈஸ்ட்போர்ன் டென்னிஸ்: அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

# Agriculture and Horticulture Officers are appointed: Chief Minister of Tamil Nadu issued work orders to 133 people.

# New and latest medical equipment which  costs  Rs.14.56 crore was brought to public use in Rajiv Gandhi Government  Hospital, Chennai.

#  The chief minister said that the gratuity paid to the Tamil Nadu Police Department in case of loss of life, loss of limb or injury while on duty will be increased.

# 62 crore people affected by extreme heat wave in India: According to the report released by the team of scientists of the United States' National Center for Climate Research.

# There is Fuel Leak in the Space Shuttle : There is a Problem for Sunitha Williams' Returning to Earth

# International T20 cricket: Virat, Rohit and Jadeja announce retirement

# European Football Championship: Switzerland beat Italy to reach the quarter-finals.

# Eastbourne tennis: USA's Taylor Brits advances to finals
Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2026

Followers