Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2024

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2024


  


 




திருக்குறள்:

பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்

குறள்:375

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

விளக்கம்:

நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.

பழமொழி :
Perseverance kills the game

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கல்வியும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி :

வெற்றி என்பது குறிக்கோள் அன்று. அது ஒரு பயணமே. பயணம் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

-ஆர்ஷேவிட்

பொது அறிவு :

1. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?


விடை: டைட்டோனி பறவை

2. இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக நிலக்கரி காணப்படுகிறது?


விடை: ஜார்கண்ட்
English words & meanings :

Quantum –a very small quantity of electromagnetic energy.
மின்காந்த ஆற்றலின் மிகைச்சிற்றளவு.
Quarrel (n) - dispute , disagreement சண்டை, கருத்து வேறுபாடு
ஆரோக்ய வாழ்வு :

குப்பை மேனி கீரை : எல்லா வகையான புண்களுக்கும் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும். பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் குப்பைமேனி இலைச் சாறு குடல் புழுக்களிலிருந்து விடுபட பயன்படுத்தப்படுகிறது.

நீதிக்கதை

மூன்று கிணறுகள்

ஒரு முறை ஒரு மனிதன் தன் வீட்டைச் சுற்றித் தோட்டம் போட நினைத்தான். ஆனால் தோட்டத்திற்குத் தினமும்

தண்ணீர் பாய்ச்ச வேண்டுமே? அதனால் ஒரு கிணறு இருந்தா நல்லதென்று நினைத்தான்.கிணறு வெட்டுவதற்காக நிலத்தில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு சரியாகப்பட்டதால் அந்த இடத்தில் கிணறு வெட்டத் தொடங்கினான்.

அவன் வெட்டிக் கொண்டே இருந்தான். இருபது முழம் ஆழம் வரை வெட்டினான். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருபது முழம் வரை வெட்டியும் அந்த இடத்தில் தண்ணி்ர் ஊற்று எதுவும் தென்படவில்லையே என்று வருந்தினான். சரி இதை அப்படியே விட்டுவிடுவோம் என்று வெட்டுவதை அப்படியே நிறுத்தி விட்டான்.

மீண்டும் இரண்டாவதாக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். அந்த இடத்தில் மறுபடியும் முப்பது முழம் ஆழம் வரை வெட்டினான். அந்த இடத்திலும் தண்ணீர் ஊற்றுத் தோன்றவில்லை. அந்த இடத்தில் வெட்டுவதையும் நிறுத்தி விட்டான்.

இப்பொழுது வேறு இடத்தில் வெட்டிப்பார்க்கலாம் என்ற எண்ணம் கொண்டான். அதனால் மூன்றாவதாக இடத்தைத் தேர்ந்தெடுத்தான். மிகவும் பாடுபட்டு அந்த இடத்தில் ஐம்பது முழம் வரை வெட்டினான். அப்படியும் தண்ணீர் வரவில்லை. அவனுக்கு அலுத்துவிட்டது. கிணறு தோண்டும் எண்ணத்தையே விட்டுவிட்டான்.

ஒருநாள், அனுபவசாலியான ஒரு பெரியவரிடம் தன் முயற்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். மூன்று முறை கிணறு வெட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லையென்றும், பூமியில் தண்ணீரே அற்றுப் போய் விட்டதென்றும் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

பெரியவர் அவனை நோக்கினார். ''தம்பி, நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குச் சரியாக பதில் சொல்" என்றார்."ஆகட்டும் பெரியவரே" என்றான். மூன்று இடத்திலும் நீ வெட்டிய மொத்த ஆழம் எவ்வளவு இருக்கும் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.

"மொத்தம் நூறு முழம் இருக்கும் ஐயா!" என்று பதில் சொன்னான் அந்த மனிதன்

"இந்த நூறு முழத்தையும் ஒரே இடத்தில் தோண்டி யிருந்தால், எப்படியும் தண்ணீர் தோன்றியிருக்குமோ?" என்றார் அந்தப் பெரிய மனிதர். அந்த மனிதன் அசட்டு விழி விழித்தான்.

''தம்பி, நீ மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததில் எந்தத் தவறுமில்லை. ஆனால் ஒரே இடத்தில் கருத்தைச் செலுத்தி நீ சலிப்பில்லாமல் தோண்டியிருந்தாயானால், நூறுமுழம் ஆழம் ஆவதற்கு முன்னாலேயே கூட நீர் கிடைத்திருக்கும். எப்போதும் விடாநம்பிக்கையுடன் ஒருமுகப்பட்ட முயற்சி யிருந்தால் எடுத்த செயல் வெற்றி பெறும்" என்றார் அந்தப் பெரியவர்.

அவர் சொல்வதும் உண்மைதானே!

மறுபடியும் தன் நிலத்தில் ஒரே இடத்தில் எழுபது முழம் வெட்டி நீர் ஊற்று கிட்டியது குறித்து ஆச்சரியம் அடைந்தான் அந்த மனிதன்.

இன்றைய செய்திகள்

13.03.2024

*13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்; தமிழக அரசு அறிவிப்பு.

*தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம்.

*அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி 4 % அகவிலைப்படி உயர்வு: மு க ஸ்டாலின் அறிவிப்பு.

*தமிழ்நாட்டில் 168 ரயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்கள் விற்பனை தொடக்கம்.

*பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வென்றார் இந்திய வீரர்
ஜெய்ஸ்வால்.

*ஐபிஎல் 2024 தொடர்: பயிற்சியை தொடங்கினர் சி.எஸ்.கே கேப்டன் தோனி.

Today's Headlines

*13 IPS officers transferred;  Tamil Nadu Government Notification.

* Heat will increase in Tamil Nadu for the next two days;  Meteorological Centre.

*Increase in 4% gratuity for the benefit of government employees, teachers and pensioners: CM Stalin's announcement.

*Sales of local products started at 168 railway stations in Tamil Nadu.

*Indian player Jaiswal won the player of the month award for February

* IPL 2024 series: CSK captain Dhoni started training.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 - Tamil மாதிரித் தேர்வு 32

TNTET 2026 - Tamil Model Test 32 | Zeal Study TNTET 2026 - Tamil மாதிரித் தேர்வு 32 Zeal Study 1. கீழ்கண்டவர்களுள் சங்ககாலப் பெண்பாற் புலவர் A. வெண்ணிக்குயத்தியார் B. வெள்ளி வீதியார் C. ஒளவையார் D. அனைவரும் 2. பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்குப் பாமாலை சூட்டியவர் A. ஔவையார் B. பண்டித ராமாபாய் C. காரைக்கால் அம்மையார் D. எவருமில்லை 3. சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி A. பண்டித ராமாபாய் B. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி C. மூவலூர் இராமாமிர்தம் D. அன்னிபெசன்ட் 4. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் ...

Zeal Study TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 32

TNTET 2026 Psychology Quiz - Zeal Study TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 32 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் | Zeal Study 1. நவோதயாப் பள்ளிகள் _________ ன் கீழ் வருகின்றன. A. சமுதாயப் பள்ளிகள் B. விரைவுபடுத்தும் பள்ளிகள் C. அண்மைப் பள்ளிகள் D. டூயியின் பரீட்சார்த்தப் பள்ளிகள் 2. மாணவன் ஒருவனுக்கு ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைக்கும் போது _________ மனப்போராட்டம் உண்டாகிறது. A. விலகுதல் - விலகுதல் B. அணுகுதல் - அணுகுதல் C. அணுகுதல் - விலகுதல் D. மேற்கண்ட ஏதுமில்லை 3. நல்ல மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி: A. விரக்தி B. நல்ல உறக்கம் C. மனச்சோர்வு ...

Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 36

TNTET 2026 Tamil Quiz - Test 36 TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 36 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் தொடங்க

Zeal study TNTET 2026 Tamil - தமிழ் மாதிரித் தேர்வு 35 Quiz

Zeal study TNTET 2026 Tamil Quiz - Test 35 TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 35 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் முயற்சி செய்

Followers