Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2024

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2024



    



திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : துறவு


குறள்:350


பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.


விளக்கம்:


 ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.


பழமொழி :

It is the pace that kills.


வேகம் விவேகம் அல்ல.


இரண்டொழுக்க பண்புகள் :


1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :


அன்பும் இரக்கமும் நிறைந்த இதயமே மன வலிமை, மன உறுதி, மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான முக்கிய ஆதாரமாகும். --தலாய் லாமா


பொது அறிவு :


1. இந்திய அறிவயற் கழகம் அமைந்துள்ள நகரம்?



விடை: பெங்களூர்


2. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?


விடை: 1919

English words & meanings :


 when an ant becomes a spy we call him/her - inform-ant-informant


ஆரோக்ய வாழ்வு : 


கோவை கீரை : சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களுக்கு கண்ட மருந்துகளைத் தடவத் தேவையே இல்லை. கோவைக்காயின் இலையை அரைத்து சாறாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


நீதிக்கதை


 வலிமை மட்டும் போதாது


எருது ஓரிடத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தது. அது வழியாக நகர்வலம் வந்த எலிக்குஞ்சு ஒன்று, ஓடி வந்து எருதின் மீது விழுந்தது. இதனால் தூக்கம் கலைந்து பார்த்தது.


"டேய். எலிப் பயலே என் மீது விழுந்தா தூக்கத்தைக் கலைத்தாய், உன்னை என்ன செய்கின்றேன் பார்" என்றது.


பலசாலியான எருது முன்னால் பயந்தபடி நின்றது எலி. "தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்று எந்தத் தவறும் செய்யவில்லை" என வேண்டியது.


"அதெல்லாம் முடியாது! என் பலம் தெரியாமல் என்னுடன் நீ விளையாடி விட்டாய். உன்னை என்ன செய்கிறேன் பார்", என மிரட்டியதும், பயந்து எலி அருகில் இருந்த வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.


எருதுவும், எலியை விடுவதாக இல்லை. தன் கூரிய கொம்புகளால், எலி வளையைக் குத்தி பெயர்த்து எடுத்தது.


எருதின் கோபம் அதிகமானது. எலி வளையை இடிக்க இடிக்க வளர்ந்து கொண்டே சென்றது.


எலி அதன் வளையை மிகவும் நீளமாக அமைத்து இருந்தது. அதனால் எருது, எலியைப் பிடிக்க முடியாமல் போனது.


வீரமாக மோதிப் பார்த்து விட்டு மிகவும் களைப்புடன் படுத்து விட்டது எருது. இந்த நேரத்தில் எலி வளையை விட்டு வெளியில் வந்து பார்த்தது.


எதிரில் எருது களைப்பால் படுத்திருந்ததைப் பார்த்தது. மீண்டும் எலி வந்து, எருதின் மீது ஏறி விளையாடியது. எருதுக்கு கோபம் அதிகமானது. கோபம் வந்து என்ன செய்ய, எலியைத் தான் அதனால் பிடிக்க முடியவில்லையே.


எருது முன்னால் தாவிக் குதித்து நின்றது எலி. "நான் தெரியாமல் செய்த தவறுக்கும். உன்னிடம் பலமுறை மன்னிப்பு கேட்டு விட்டேன். நீ பெருந்தன்மையாக என்னை மன்னித்திருக்கலாம் அல்லவா.


உனக்கு எவ்வளவு தான் பலம் இருப்பினும் அவமானம் அடைந்தாயே! உடல் பலத்தால் மட்டும் யாரையும், வென்று விட முடியாது புரிந்து கொள்" என்றபடி எலி தாவிக் குதித்து வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.


எருதும் தன் தவறை உணர்ந்து வருந்தியது.




நீதி : எளியவரை எப்பொழுதும் வென்று விடலாம் என தவறாக நினைத்து விடக் கூடாது. உடல் வலிமையை விட மனவலிமையே வெற்றி பெறும்.


இன்றைய செய்திகள்


06.02.2024


*அரசியல் கட்சி பிரசாரங்களில் குழந்தைகளை பயன்படுத்த தடை; தேர்தல் ஆணையம் உத்தரவு.


*ஜார்க்கண்ட் சட்டப்பேரவை- நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் வெற்றி.


*பெண் விவசாயிகள் கருத்தரங்கு; 8ஆம் தேதி சின்னமனூர் வருகிறார் கவர்னர்.


*இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் கோஷ், ஆஸ்திரேலிய பாராளுமன்ற எம்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


*தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்; வானிலை ஆய்வு மையம்.


*இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி.


Today's Headlines


*Prohibition of using children in political party campaigns;  Election Commission order.


 *Jharkhand Assembly- Sambhai Soren won the trust vote.


 *Women Farmers Seminar;   Governor is coming to Chinnamanur on  8th.


 *Varun Ghosh, of Indian origin, has been appointed as an Australian MP.


 *Dry weather likely to prevail in Tamil Nadu till February 11;  Meteorological Centre.


 *Second Test against England: Indian team got tremendous victory

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers