Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.02.2024

Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.02.2024



 





திருக்குறள்:

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:364

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

விளக்கம்:

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

பழமொழி :
No roses with out thorn

முள்ளில்லா ரோஜாக்கள் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

மற்றவர்கள் மீதான அக்கறை உணர்வு, நம் வாழ்விற்கு அர்த்தத்தைத் தருகிறது. இது தான் மனிதனின் அனைத்து மகிழ்ச்சிக்கும் மூலமாகும். --தலாய் லாமா

பொது அறிவு :

1.சிங்கப்பூரின் பழைய பெயர்?

விடை: டெமாஸெக்

2. ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?

விடை: அழ.வள்ளியப்பா

English words & meanings :

gaudy - showy ஆடம்பரமான gallent - stately.துணிச்சலான
ஆரோக்ய வாழ்வு :

செவ்வாழைப்பழம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பல் வலி, பல்லசைவு போன்ற உபாதைகளையும், விரைவில் குணப்படுத்தும். உடல் எடையை கட்டுப்படுத்தும். 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.
நீதிக்கதை

இனிப்பும் கசக்கும்

உலகம் போற்றும் சுவாமி விவேகானந்தரின் குருவான சிறந்த ஆன்மீகவாதியாகத் திகழ்ந்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு நாள் ஒரு பெரிய கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அவர் கூறும் கருத்துக்களை அனைவரும் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று ஒரு பெண்மணி தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு வந்து அவர் முன் நின்றாள்.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அந்தப் பெண்மணியை பார்த்து."தாயே உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார்.

உடனே அந்த அம்மையார் "சுவாமி என் மகன் அதிகமான அளவு இனிப்பு சாப்பிடுகிறான். அது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று அவனுக்குத் தெரியவில்லை.அதனால், தாங்கள் தான் அவன் அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடக்கூடாது என்று தகுந்த அறிவுரை கூறவேண்டும் என்றாள்.

அவள் மேலும் சொன்னாள். "நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் என் சொல்லைக் கேட்கமாட்டேன் என்கிறான். அடித்துக்கூடப் பார்த்தேன், ஒரு பயனுமில்லை என்றாள்.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அந்தப் பெண்மணியைப் பார்த்து, "சரி தாயே! நீங்கள் உங்கள் மகனை ஒரு வாரம் கழித்து என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார்.

அந்தப் பெண்மணியும் பதில் ஏதும் பேசாது. சுவாமியிடம் விடை பெற்றுக்கொண்டு, தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்று விட்டாள்.

ஒரு வாரம் கடந்தது. அந்தப் பெண்மணி மீண்டும் தன் மகனை அழைத்துக் கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்க்க வந்தாள்.

அந்தப் பெண்மணியை அன்புடன் வரவேற்றார். பிறகு அவளுடைய மகனைப் பார்த்து, "தம்பி இனிப்புகள் அதிகம் சாப்பிடுகிறயாமே? அவ்வாறு அதிகம் சாப்பிடக்கூடாது. அவ்வாறு அதிகம் சாப்பிட்டால் அது உன் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். உன் வயிற்றில் பூச்சிகள் உருவாகும்". என அறிவுரை கூறினார்.

அந்தப் பெண்மணிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. அதை சுவாமியிடம் கேட்டு விடலாம் என்று எண்ணிய அவள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை பார்த்து "சுவாமி, நான் முதல் நாள்,என் மகனை உங்களிடம் அழைத்து வந்த போதே அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கும் என்று என் மகனுக்கு அறிவுரை கூறியிருக்கலாமே? ஏன் ஒரு வாரம் பொறுத்து வரச் சொல்லி எளிய அறிவுரை கூறுகிறீர்கள்?" என்று கேட்டாள்.

அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் புன்னகை புரிந்தபடியே, "தாயே! நீங்கள் உங்கள் மகனை முதல் முறையாக அழைத்து வந்த போது நானே அதிக அளவில் இனிப்பு சாப்பிடுபவனாக இருந்தேன். அன்னிலையில் நான் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறும் தகுதியை அப்பொழுது பெற்றிருக்கவில்லை. பிறகு ஒரு வாரம் கழித்து வரச் சொன்ன போது நான்

இனிப்புகள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். அதனால்தான் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறினேன்" என்றார்.

அந்தத் தாய் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை புகழ்ந்த படியே சென்றாள். அந்தச் சிறுவனும் அன்று முதல் அதிகமான அளவில் இனிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டான்.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம்? எதற்குமே ஒரு தகுதி வேண்டும். பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு நாம் நல்வழியில் நடக்கிறோமா என்று தெரிந்துகொள்ள வேண்டும். நாம் தவறான வழியில் நடந்து கொண்டு மற்றவர்களை நல்வழியில் நடக்குமாறு அறிவுரை கூறக்கூடாது. அதில் பயனில்லை. தகுதியுள்ள நல்லவர்கள் யாவரையும் நல்வழிப்படுத்துவர்.

இன்றைய செய்திகள்

26.02.2024

* தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்.

*தூத்துக்குடியில் ரூபாய் 16,000 கோடி மின்சார வாகன ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்.

*தனியாரிடம் மின் மீட்டர் வாங்க நுகர்வோருக்கு மின்வாரியம் அனுமதி அளித்துள்ளது.

*மலைப்பகுதி மகளிருக்கும் இன்று முதல் இலவச பயணம் அமைச்சர் சிவசங்கர் தகவல்.

*இந்தியாவில் அதிக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனை படைத்த அஸ்வின்.

Today's Headlines

*Chance of rain in coastal areas of South Tamil Nadu: Meteorological Centre.

* CM Stalin lays foundation stone for Rs 16,000 crore electric vehicle plant in Thoothukudi.

*Energy Board has allowed consumers to buy electricity meters from private parties.

*Minister Sivashankar informs that free travel from today onwards for the women of the hilly regions.

*Ashwin set a new record by taking 500 wickets in most Test cricket in India.
Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers