Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2023

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2023



       







திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : புலால் மறுத்தல்


குறள் :251


தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்.


விளக்கம்:


தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?.


பழமொழி :

Blood is thicker than water


தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.


2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.


பொன்மொழி :


உங்களை கையாள, உங்கள் மூளையை பயன்படுத்தவும்; மற்றவர்களைக் கையாள, உங்கள் இதயத்தைப் பயன்படுத்தவும்.” – எலினோர் ரூஸ்வெல்ட்


பொது அறிவு :


1. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?



விடை: கல்கத்தா பல்கலைக்கழகம்


2. இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை?


விடை: 1 லட்சத்து 55 ஆயிரம்


English words & meanings :


 Cho-ke - become unable to breathe when something stuck in the throat or you cannot breathe, verb. மூச்சடைக்கப்படுதல், வினைச் சொல். The flowers were choked by the weeds.

ஆரோக்ய வாழ்வு : 


 உளுத்தம் பருப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.


நீதிக்கதை


ஒரு கிராமத்தில் மழை இன்மையால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் தண்ணீர் பஞ்சம் போக்க என்ன செய்யலாம் என்று யோசித்து ஊரின் வாலிபர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து இருக்கும் கிணறுகளை ஆழமாக வெட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் படியே நான்கு குழுவினரும் கிணறுகளை ஆழமாகத் தோண்டினர். எனினும், அவற்றில் நீர் சுரப்பதற்கான அறிகுறியே இல்லை. அவர்கள் அனைவரும் களைத்துப் போய் விட்டனர்; நீரைக் காணாது சோர்வும் அடைந்தனர். நேரம் ஆக ஆக அவர்களின் நம்பிக்கை குறையவே, மூன்று குழுவினர் கிணறு தோண்டும் முயற்சியைக் கைவிட்டனர். ஆனால், ஆலன், ஆறுமுகம், முகமது, டேவிட் ஆகிய நால்வரும் முயற்சியைக் கைவிடவில்லை. அவர்கள் மனவுறுதியுடன் தொடர்ந்து தோண்டினர். ஊர்மக்களோ"நீர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.


மேலே வந்துவிடுங்கள்; என்று வேண்டினர். அவர்கள்  நால்வரும்  தோண்டிய  கிணற்றில் திடீரென்று நீர் ஊற்று தென்பட்டது. மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அந்த நால்வருக்கும் மக்கள் நன்றி கூறினர். எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்கக் கூடாது என்ற மன உறுதிதான் வெற்றிக்கு வழிவகுத்தது.


இன்றைய செய்திகள்


01.09. 2023


*நிலவின் அதிர்வுகளை பதிவு செய்த விக்ரம் லேண்டர் - இஸ்ரோவின் புது அப்டேட். 


*இந்திய ரயில்வேயின் முதல் பெண் தலைமை நிர்வாகி ஆகிறார் ஜெயவர்மா.


* இனி அக்டோபர் "இந்து பாரம்பரிய" மாதமாக கொண்டாடப்படும்: அமெரிக்க மாநிலத்தில் தீர்மானம்.


* செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை அரசாணை வெளியீடு.


*இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு..5 ஆண்டுகளுக்கு அம்பானி கையில்...


* 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது - பாகிஸ்தான் அணி புதிய சாதனை.


Today's Headlines


* Vikram Lander recorded the vibrations of the Moon - ISRO's new update.


 *Jayavarma becomes the first woman Chief Executive of Indian Railways.


 * October to be observed as "Hindu heritage" month from now on: Resolution in US state.


 * Vinayagar Chaturthi Holiday Ordinance on 18th September GO released.


 * Broadcasting of Indian team's cricket matches..5 years in Ambani's hands...


 * Pakistan beat Nepal by 238 runs - a new record.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Zeal study TNTET 2026: தமிழ் மாதிரித் தேர்வு - 3 இயல் 1 - 3 (50 வினாக்கள்) online test

TNTET 2026 Tamil Quiz - Model Test 3 TNTET 2026: தமிழ் மாதிரித் தேர்வு - 3 இயல் 1 - 3 (50 வினாக்கள்) [Zeal study ] விடைகளைச் சரிபார்க்கவும்

Followers