Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2023

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2023

     




திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம்:அருளுடைமை


குறள் :248


பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.


விளக்கம்:


பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.



பழமொழி :

Bitter is patience but sweet is its fruit


பொறுமை கசப்பானது அதன் பலன் இனிப்பு



இரண்டொழுக்க பண்புகள் :


1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.


2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.


பொன்மொழி :


தயங்குகிறவன் கை தட்டுகிறான் துணிந்தவன்


கை தட்டல் பெறுகிறான்


ஜான் கென்னடி


பொது அறிவு :


1. தமிநாட்டின் எஃகு தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?



விடை: சேலம்


2. கலாச்சாரத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?



விடை: தஞ்சாவூர்

English words & meanings :


 bedraggled - wet or drenched and untidy. Adjective. மிகுதியான ஈரத்தோய்வுடன் மாசு படிந்த. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு : 


உளுத்தம் பருப்பு: கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 


ஆகஸ்ட்30


வாரன் எட்வர்ட் பஃபெட் அவர்களின் பிறந்தநாள் 


வாரன் எட்வர்ட் பஃபெட் (Warren Edward Buffett, பிறப்பு: ஆகஸ்ட் 30. 1930) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே"[4] என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது


நீதிக்கதை


பீர்பாலின் புத்திசாலித்தனம்


 காபூல் அரசருக்கு, பீர்பாலின்


அறிவாற்றலையும்,


புத்திசாலித்தனத்தையும் கேள்விப்பட்ட


அவர், பீர்பாலின் அறிவை ஆராய்ந்து


அறிய ஆவல் ஏற்பட்டது.


 அதனால், காபூல் அரசர், ஒரு கடிதம்


எழுதினார். அதில் மேன்மை தாங்கிய


அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு,


ஆண்டவன் தங்களுக்கு நலன்கள்


பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக.


தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம்


அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு


எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன்


மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல்


அரசர்.


 கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு


குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே


புரியவில்லையேன்னு குழம்பி,


பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு.பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு.


அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில்


அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதி


அனுப்புங்கள் என்றார். அக்பரும்


அதேபோல் தபால் எழுதி அனுப்பினார்.


 பிறகு அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம்


அதிசயம் எப்படி அனுப்புவீர்? என்று


கேட்டார்.


 அதற்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து


அந்த அதிசயத்தைப் பாருங்கள் மன்னா


என்றார்.


 பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்து


ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த


பூசணிப்பிஞ்சு ஒன்றைக் கொடியுடன்


மண் குடத்திற்குள் வைத்து


வைக்கோலால் குடத்ததை மூடினார்.


 சிறிது நாட்களான பிறகு பூசணிப் பிஞ்சு


குடம் நிறையுமளவிற்கு


குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து


பெருத்திருந்தது. குடத்துக்குள் இருக்கும்


பூசணிக்காயை மட்டும்


வைத்துக்கொண்டு மற்றதை நீக்கி


விட்டார் பீர்பால்.


பிறகு அந்தக் குடத்தை அக்பரிடம்


காட்டினார் பீர்பால். அக்பருக்கு


ஆச்சரியம். குடத்தின் வாய் பகுதி உள்ளே


இருக்கும் பூசணிக்காயைவிட மிக


சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய


பூசணிக்காயை எப்படி நுழைத்தீர்கள்


எனக் கேட்டார். 


 பீர்பால் அதைப்பற்றி மன்னருக்கு


விளக்கிக் கூறினார். அந்தப்


பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல்


அரசருக்கு அதிசயம் என்று அனுப்பி


வைக்குமாறு கூறினார்.


 குடத்திற்குள் இருக்கும் பூசணியைப்


பார்த்த காபூல் அரசர், பீர்பாலோட புத்திக்


கூர்மையை எண்ணி வியப்பில்


ஆழ்ந்தார்.




நீதி :


புத்திசாலியாக இருந்தால் முடியாது


என்பது கூட முடியும்.


இன்றைய செய்திகள்


30.08. 2023


*சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைப்பு- மத்திய அரசு அதிரடி.


*காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும்- காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.


*சிறுநீரக செயல் இழப்பை கண்டுபிடிக்கும் 'ஸ்டிப்'  -சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் அறிமுகம்.


* வானில் இன்று நீல நிற முழு நிலவை பார்க்கலாம் - மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு.


*உலக பேட்மிட்டன் தரவரிசை: ஆறாவது இடத்திற்கு முன்னேறினார் எச்.எஸ். பிரனாய்.


*ஆசிய கோப்பை தொடரில் முக்கிய வீரர்கள் இல்லாத இலங்கை அணி அறிவிப்பு.


Today's Headlines


*Cooking gas cylinder price reduced by Rs 200- central government action.


 * Cauvery Management Authority orders to release water at the rate of 5000 cubic feet per second for 15 days.


 * Chennai Government Hospitals

Introduce 'STIP' to detect kidney failure 


 * A blue full moon can be seen in the sky today - a rare event that only happens once in three years.


 *World Badminton Rankings: H.S.Pranai advances to sixth position.  


 *Sri Lankan team announced  the list without key players for Asia Cup series.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 - Tamil மாதிரித் தேர்வு 32

TNTET 2026 - Tamil Model Test 32 | Zeal Study TNTET 2026 - Tamil மாதிரித் தேர்வு 32 Zeal Study 1. கீழ்கண்டவர்களுள் சங்ககாலப் பெண்பாற் புலவர் A. வெண்ணிக்குயத்தியார் B. வெள்ளி வீதியார் C. ஒளவையார் D. அனைவரும் 2. பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்குப் பாமாலை சூட்டியவர் A. ஔவையார் B. பண்டித ராமாபாய் C. காரைக்கால் அம்மையார் D. எவருமில்லை 3. சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி A. பண்டித ராமாபாய் B. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி C. மூவலூர் இராமாமிர்தம் D. அன்னிபெசன்ட் 4. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் ...

Zeal Study TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 32

TNTET 2026 Psychology Quiz - Zeal Study TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 32 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் | Zeal Study 1. நவோதயாப் பள்ளிகள் _________ ன் கீழ் வருகின்றன. A. சமுதாயப் பள்ளிகள் B. விரைவுபடுத்தும் பள்ளிகள் C. அண்மைப் பள்ளிகள் D. டூயியின் பரீட்சார்த்தப் பள்ளிகள் 2. மாணவன் ஒருவனுக்கு ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைக்கும் போது _________ மனப்போராட்டம் உண்டாகிறது. A. விலகுதல் - விலகுதல் B. அணுகுதல் - அணுகுதல் C. அணுகுதல் - விலகுதல் D. மேற்கண்ட ஏதுமில்லை 3. நல்ல மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி: A. விரக்தி B. நல்ல உறக்கம் C. மனச்சோர்வு ...

Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 36

TNTET 2026 Tamil Quiz - Test 36 TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 36 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் தொடங்க

Zeal study TNTET 2026 Tamil - தமிழ் மாதிரித் தேர்வு 35 Quiz

Zeal study TNTET 2026 Tamil Quiz - Test 35 TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 35 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் முயற்சி செய்

Followers