Skip to main content

அறிவியல் தேர்வில் யாரா இருந்தாலும் 70 மார்க் வாங்கலாம்! சென்டம் வாங்க ஈசி டிப்ஸ்!

 அறிவியல் தேர்வில் யாரா இருந்தாலும் 70 மார்க் வாங்கலாம்! சென்டம் வாங்க ஈசி டிப்ஸ்!

பத்தாம் வகுப்பு பாடங்களில் பலருக்கும் பிடித்த பாடங்களில் அறிவியல் ஒன்று. போட்டி போட்டு கொண்டு மாணவர்கள் சென்டம் எடுக்கும் பாடங்களில் கணிதத்திற்கு அடுத்து அறிவியல்தான். எப்படி அந்த அறிவியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி? மெதுவாக கற்கும் மாணவர்கள் (Slow Learners) எப்படி நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் ஆவது எப்படி? போன்றவற்றை இந்த கட்டுரையில் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

பசங்கள பயப்பட வேணான்னு சொல்லுங்க! மெதுவாக கற்கும் மாணவர்கள் கூட 70 மதிப்பெண் எடுத்து பாஸ் ஆக அறிவியலில் வழி இருக்கு என்று உற்சாகத்தோடு நம்முடன் உரையாடலை துவங்கினார் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் மரிய பிரான்சிஸ் சேவியர் அவர்கள். எப்படி பொதுத்தேர்வு அறிவியல் பாடத்தை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதை கேள்வி வாரியாக இந்த கட்டுரையில் விளக்கியுள்ளார்.


1 மதிப்பெண் வினாக்கள்(1 Marks)


1 மதிப்பெண் வினாக்கள் 12 கேட்கப்படும். பாஸ் ஆக வேண்டுமென்றால் இதில் 10 மதிப்பெண்ணாவது எடுக்க வேண்டும். அறிவியலில் மொத்தம் 23 பாடங்கள் உள்ளன. பாடங்கள் அதிகமாக இருப்பதால் இரண்டு பாடத்திற்கு ஒரு கேள்வி என்ற வகையில் வரும்.


இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology) ஆகிய மூன்று பிரிவுகளில் இருந்தும் தனித்தனியாக நாலு கேள்விகள் கேட்கப்படும். எனவே, எல்லா பாடத்திலும் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், கோடிட்ட இடங்கள், பொருத்துக இது எல்லாவற்றையும் படித்து கொள்ள வேண்டும். 

இந்த 12 கேள்வியில் 9 கேள்விகள் புத்தகத்தில் இருக்கும் மதிப்பீட்டு வினாக்களில் இருந்து வரும். மீதி மூன்று கேள்விகள் புத்தகத்தின் உள்ளே இருக்கக்கூடிய உங்களுக்கு தெரியுமா? மேலும் அறிவோம், பாக்ஸ் தகவல்கள் ஆகியவற்றிலிருந்து கேட்கப்படும். 


எனவே சென்டம் எடுக்க விரும்பும் மாணவர்கள் புத்தகத்தை முழுமையாக ஒரு முறை படித்து கொள்ள வேண்டும். உதாரணமாக மதிப்பீடுகள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் சார்ந்த கேள்விகள் இதில் கேட்கப்படலாம்.


2 மதிப்பெண் வினாக்கள்(2 Marks) 


2 மதிப்பெண் வினாக்கள் 13வது கேள்வியில் இருந்து துவங்குகிறது. அதில் 22வது கேள்வி மட்டும் கட்டாய வினா. மொத்தம் 7 கேள்விகள் எழுத வேண்டும். மெதுவாக படிக்கும் மாணவர்கள் கூட 5 லிருந்து 6 கேள்விகள் எழுத முடியும். 

அதில் இயற்பியலில் இருந்து அதிகமாக மீண்டும் மீண்டும் வரும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதே போல், வேதியியலில் இருந்து மதிப்பீடுகள் சார்ந்த கேள்விகள், உயிரியல் பாடத்தில் இருந்து ஒரு வரியில் அல்லது பாயிண்டுகளாக எழுதுவது போன்ற கேள்விகள் கேட்கப்படும். அதிலும் குறிப்பாக புத்தகத்தில் இருக்கும் டயாக்ராம்களை ஒரு முறை பார்த்து கொள்ளுங்கள். அந்த கேள்வி கண்டிப்பாக வரும் என்பதால் 2 மதிப்பெண் ஈசியாக வாங்கலாம்.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:


சரியா தவறா என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. அதற்கு பதில் எழுதும்போது சரி என்றால் அதை மட்டும் எழுத வேண்டும். தவறு என்றால் தவறு என்பதை எழுதி அது ஏன் தவறு என்றும் எழுத வேண்டும். 

அதே போல் கூற்று காரணம் என்று ஒரு கேள்வி இருக்கிறது. இதில் ஒரு கேள்வியின் கூற்று மற்றும் காரணத்தை கொடுத்துவிட்டு இதில் எது சரி தவறு என கேட்பார்கள். இதற்கு அடுத்து பொருத்துக. இவை மூன்றையும் புத்தகத்தை சாதாரணமாக பார்த்து வைத்து கொண்டாலே எழுதி விடலாம். 


இதை தவிர இயற்பியல் விதிகளில் ஒரு விதி 2 மதிப்பெண் வினாவாக வரும். அதே போல் கோடிட்ட இடங்கள் இரண்டு கொடுத்து அதற்கான விடை கேட்க வாய்ப்புள்ளது. 


கட்டாய கேள்வி (Question No. 22)


சென்டம் எடுக்க விரும்பும் மாணவர்கள் 22வது கேள்விக்கான ப்ராப்லம் சால்விங் கேள்விகளை நன்றாக போட்டு பார்த்து கொண்டால் போதும். மின்னியல் பாடத்தில் மின்தடை குறித்த கேள்விகளை நன்றாக படித்து கொள்ளுங்கள். இயற்பியலில் லென்ஸ் குறித்த கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஒளியியல் பாடத்தில் கதிர் படம் வரைதல், வேதியியலில் இருந்து Ph மதிப்புகள் குறித்த கேள்வி கேட்கப்படலாம்.


4 மதிப்பெண் வினாக்கள்(4 Marks)


இதிலும் 32வது கேள்வி கட்டாய வினாவாக கேட்கப்படும். மூன்று பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் இருந்து மதிப்பீடுகள் சார்ந்த கேள்வி அல்லது ப்ராப்லம் சால்விங் கேள்விகள் இதில் கேட்கப்படலாம். 4 மதிப்பெண் வினாக்களை பொறுத்த வரை இரண்டு 2 மதிப்பெண் வினாக்களை ஒன்றாக சேர்த்து ஒரு கேள்வியோ அல்லது ஒரு 5 மதிப்பெண் வினாவை அப்படியே 4 மதிப்பெண் வினாவாகவோ கேட்கலாம்.


எனவே, மெதுவாக படிப்பவர்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தெரிந்த கேள்விகளை தேர்வு செய்வது நல்லது. சென்டம் வாங்க விரும்புபவர்கள் எல்லாவற்றையும் எழுதித்தான் ஆக வேண்டும்.


7 மதிப்பெண் வினாக்கள்(7 Marks)


இதில் இயற்பியல், வேதியல், உயிரியல் என ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் ஒரு கேள்வியென மொத்தம் மூன்று கேள்விகள் எழுத வேண்டும். சென்டம் வாங்க கூடிய மாணவர்கள் தங்களுக்கு 7 மதிப்பெண்ணும் கிடைக்க வாய்ப்புள்ள கேள்வியை தேர்வு செய்து எழுத வேண்டும். மெதுவாக கற்கும் மாணவர்களும் தங்களுக்கு தெரிந்த ஓரிரண்டு கேள்விகளை பயமின்றி எழுதலாம்.


படம் வரைதல்!


படம் வரையும் போது பென்சிலில் வரைய வேண்டும்.


பாகங்களை சரியாக குறித்து எடுத்து எழுத வேண்டும்.


படத்தை நடுவில் வரைந்து சைடு பகுதிகளில் பாகங்களை குறிக்க வேண்டும்.


டையாக்ராம் வரையும்போது நிதானமாக சரியாக வரைய வேண்டும்.


மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை:


ஒரு மதிப்பெண் வினாக்களை தனியாக படித்து விட வேண்டும்.


2 மதிப்பெண் வினாக்களுக்கு இயற்பியலில் முதல் 3 பாடங்கள், வேதியியலில் முதல் இரண்டு பாடங்கள், உயிரியலில் முதல் மூன்று பாடங்கள் படித்தாலே போதும். 


இரண்டு மதிப்பெண் வினாக்களில் நல்ல மார்க் எடுத்து விடலாம்.


காலையில் எழுந்து படித்தல் படித்தவற்றை நினைவில் நிறுத்த உதவும்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

TNTET 2026 psychology : ஒருங்கிணைந்த மாதிரித் தேர்வு

Psychology Quiz - TNTET 2025 வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் - மாதிரித் தேர்வு வாழ்த்துகள்! தேர்வு முடிந்தது. மீண்டும் தொடங்கவும்

Followers