Skip to main content

புதிய கல்விக் கொள்கை- ஒரு பார்வை

 *அன்பு பெற்றோர்களுக்கும்* 

*_தமிழாக்கம்_* 


புதிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவை பச்சை கொடி காட்டியுள்ளது. 

34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

புதிய கல்விக் கொள்கையின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் பின்வருமாறு:

*5 ஆண்டுகள் அடிப்படை படிப்பு*

 *1* . 4 வயதில்(3-வயது முடிந்து 4-வயது தொடங்கும்போது) நர்சரி(pre KG)

 

 *2* . 5- வயதில் ஜூனியர் கேஜி (LKG)

 

 *3* . 6-வயதில் சீனியர் கேஜி(UKG)

 

 *4* . 7- வயதில்(6-வயது முடிந்து 7-வயது தொடங்கும்போது) முதல் வகுப்பு

 

 *5* ..8- வயதில்   2-ஆம் வகுப்பு


 

*3 வருட ஆயத்த நிலை படிப்பு*

 

 *6* .   9-வயதில் 3-ஆம் வகுப்பு

 

 *7* .  10-வயதில் 4-ஆம் வகுப்பு

 

 *8* .  11- வயதில் 5-ஆம் வகுப்பு


 

 *3* *ஆண்டுகள்* *நடுநிலை* *படிப்பு**

 

 *9* .  12 - வயதில் 6-ஆம் வகுப்பு..

 

 *10* .  ..13 - வயதில் 7-ஆம் வகுப்பு 

 

 *11* .  14 - வயதில் 8-ஆம் வகுப்பு


 

*4 ஆண்டுகள் மேல் நிலை படிப்பு*

 

 *12*   15- வயதில் 9-ஆம் வகுப்பு

 

 *13* . 16 -வயதில் 10-ஆம் வகுப்பு

 

 *14* .17- வயதில் 11-ஆம் வகுப்பு( First year junior college)

 

 *15* . 18 -வயதில் 12-ஆம் வகுப்பு (second year junior college )


*சிறப்பு மற்றும் முக்கியமான விஷயங்கள்*:

 

12 ஆம் வகுப்பில் மட்டுமே பொது தேர்வு இருக்கும்  எம்ஃபில் படிப்பு இனி இல்லை.. கல்லூரி பட்டப்படிப்பு 4 ஆண்டுகள் 

 

 10-ஆம் வகுப்பு பொது தேர்வு இல்லை, எம்ஃபில் படிப்பும் இல்லை..

 

 இனி 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தாய்மொழி, உள்ளூர் மொழி மற்றும் தேசிய மொழி மட்டுமே கற்பிக்கப்படும். 

மீதமுள்ள பாடம், ஆங்கிலமாக இருந்தாலும், பாடமாக கற்பிக்கப்படும்.

  

 இப்போது 12வது பொதே தேர்வு மட்டுமே நடத்த வேண்டும். 

அதேசமயம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  இனி இல்லை..

 

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை செமஸ்டரில்( 6 மாதத்திற்கு ஒரு முறை) தேர்வு நடைபெறும். 

5+3+3+4 என்ற விபரப்படி  பள்ளிக்கல்வி கற்பிக்கப்படும்.

 

அதே நேரத்தில், கல்லூரி பட்டப்படிப்பு 3 மற்றும் 4 ஆண்டுகள் இருக்கும். 

அதாவது, முதல் ஆண்டு பட்டப்படிப்பு சான்றிதழ், இரண்டாம் ஆண்டில் டிப்ளமோ(பட்டயம்), மூன்றாம் ஆண்டில் பட்டம்.

 

3 ஆண்டு பட்டப்படிப்பு என்பது உயர்கல்வி படிக்க விரும்பாத மாணவர்களுக்கானது. 

அதேசமயம் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் 4 வருட பட்டப்படிப்பு படிக்க வேண்டும். 

4 வருட பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு வருடத்தில் MA முடிக்கலாம்..

 

இப்போது மாணவர்கள் எம்ஃபில் படிக்க வேண்டியதில்லை. 

மாறாக, MA மாணவர்கள் இனி நேரடியாக PhD படிக்கலாம்..

 

*10ம் வகுப்பு பொதுத்தேர்வு இனி இருக்காது.*

 

மாணவர்கள் இடையிடையே மற்ற படிப்புகளை தொடர முடியும். 

உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 2035ல் 50 சதவீதமாக இருக்கும். அதே சமயம், புதிய கல்விக் கொள்கையின்படி, ஒரு படிப்பின் இடையே ஒரு மாணவர் வேறு பாடத்தை படிக்க விரும்பினால்,  ஒரு குறிப்பிட்ட கால இடை வெளியில் வேறு பாடபிரிவை தேர்தெடுத்து படிக்கலாம் 

 

உயர்கல்வியிலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 

சீர்திருத்தங்களில் தரப்படுத்தப்பட்ட கல்வி, நிர்வாக மற்றும் நிதி சுயாட்சி போன்றவை அடங்கும். இது தவிர, பிராந்திய மொழிகளில் கணனி

 படிப்புகள் தொடங்கப்படும். 

மெய்நிகர் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். 

தேசிய கல்வி அறிவியல் மன்றம் (NETF) தொடங்கப்படும். 

நாட்டில் 45 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன 

 

 இந்த சட்டம் அரசு, மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் 

பொருந்தும்..

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers