Skip to main content

பள்ளிகளுக்கு மொபைல் போன் எடுத்து வர மாணவர்களுக்கு தடை


பள்ளிகளுக்கு மொபைல் போன் எடுத்து வர மாணவர்களுக்கு தடை

'பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வந்தால், பறிமுதல் செய்யப்படும்; திரும்ப வழங்கப்படாது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அனைத்து பள்ளி மாணவர்களும், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர அனுமதி கிடையாது.

மீறி கொண்டு வந்தால், அவை பறிமுதல் செய்யப்படும்; திரும்ப வழங்கப்படாது. எனவே, பிள்ளைகள் மொபைல் போன் கொண்டு வராமல், பெற்றோர் உரிய அறிவுரை வழங்க வேண்டும். மொபைல் போன் கொண்டு வராமல் மாணவர்களை தடுக்கும் வகையில், ஆசிரியர்களை கொண்டு சுழற்சி முறையில் சோதனை நடத்த வேண்டும். அரசு பஸ்களில் படிக்கட்டில் நின்று, மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் இருக்கக் கூடாது. எனவே, எல்லா பாடவேளைகளிலும் வகுப்பறையில் ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உணவு இடைவேளையில், பாதுகாப்பான இடத்தில் மாணவர்கள் தனித்தனியே அமர்ந்து, உணவு உண்ண வேண்டும்.தனியார் வாகனங்களில் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, வாகன ஓட்டுனர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். பள்ளி வாகனங்களில் பாதுகாப்பை உறுதி செய்து, பொறுப்பாளர் நியமிக்க வேண்டும்.

எவ்வித முன் தகவலும் இன்றி, மூன்று நாட்கள் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோரிடம் ஆசிரியர்கள் விசாரிக்க வேண்டும். அதன் விபரத்தை, பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவ, மாணவியரின் ஒழுக்க நடைமுறைகளில், எந்த சமரசமும் செய்ய கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TNTET 2026 - தமிழ் (Tamil) மாதிரித்தேர்வு - 22

கல்வியாளர்கள்: குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; இவர் நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

Followers