Skip to main content

இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக் கூடாது. -மத்திய கல்வி அமைச்சகம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டது

இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக் கூடாது. -மத்திய கல்வி அமைச்சகம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டது. கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய பரிந்துரையில், 2-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு, வீட்டுப்பாடம் தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள், அவர்களுக்கான வீட்டுப்பாடம் குறித்து, மத்திய கல்வி அமைச்சகம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 10-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் கொண்டு செல்லும் புத்தகப் பைகளின் எடை, அவர்களின் உடல் எடையில் 10 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது -
பள்ளிகளில் டிஜிட்டல் எடை இயந்திரங்கள் வைக்கப்பட வேண்டும் - அதைப் பயன்படுத்தி, புத்தகப் பைகளின் எடையை தொடர்ந்து மதிப்பிட வேண்டும் -
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது உள்ளிட்ட சேவைகள் தரமானதாக இருக்க வேண்டும் - அனைத்து மாணவர்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை, பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் -
2-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது - 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு, வாரத்திற்கு 2 மணி நேரம் மட்டும் வீட்டுப்பாடம் தரவேண்டும் - 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வீட்டுப்பாடம் தரவேண்டும் - 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினந்தோறும் 2 மணி நேரம் வீட்டுப்பாடம் தரப்பட வேண்டும் -
பள்ளிகளில் மாணவர்கள் விளையாடவும், இதர நூல்களை வாசிக்கவும் போதுமான நேரம் வழங்க வேண்டும் -
இந்தப் பரிந்துரைகள், மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றை அமல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers